நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அல்-குர்ஆனை மிதித்த குற்றச்சாட்டை பல்கலைக்கழக மாணவர் மறுத்துள்ளார்

குவாந்தான்:

அல்-குர்ஆனை அவமதித்ததாகவும், மிகவும் ஆபாசமான தகவல்தொடர்புகளை அனுப்பியதாகவும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் இங்குள்ள ஒரு பல்கலைக்கழக மாணவர் குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்.

முன்னதாக, குற்றம் சாட்டப்பட்டவர் காலை 9 மணியளவில் பலத்த பாதுகாப்புடன் இங்குள்ள குவாந்தான் நீதிமன்ற வளாகத்திற்கு வந்தார்.
இன்றுடன் நீதிமன்றக் காவல் முடிவடைந்த அவர் நீதிமன்றத்தின் முதல் மாடியில் உள்ள அமர்வு நீதிமன்றத்திற்கு பல போலிஸ் அதிகாரிகளுடன் அவர் வந்தார்.

நீதிமன்ற வளாகத்தில் அவரது இருப்பு பொதுமக்களின் கவனத்தையும் ஈர்த்தது.

சமூக ஊடக தளமான த்ரெட்ஸில் வைரலான குற்றம் சாட்டப்பட்டவரின் செயல்கள், அல்-குர்ஆனை மிதித்து இஸ்லாத்தை அவமதித்ததாகவும், இணைய வசதிகளை முறையற்ற முறையில் பயன்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset