நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டோஹா, ஜெட்டா, மதீனாவுக்கான விமான பயணங்களை புதன்கிழமை வரை மாஸ் ரத்து செய்தது

சிப்பாங்:

டோஹா, ஜெட்டா, மதீனாவுக்கான விமான பயணங்களை புதன்கிழமை வரை மலேசிய ஏர்லைன்ஸ் (மாஸ்) ரத்து செய்துள்ளது.

அந்நாடுகளில் நடக்கும் தாக்குதல்கள் காரணமாக மலேசியா ஏர்லைன்ஸ் இம்முடிவை எடுத்துள்ளது.

இதன் அடிப்படையில் வரும் புதன்கிழமை வரை கோலாலம்பூரிலிருந்து டோஹா, ஜெட்டா, மதீனா செல்லும் அனைத்து விமானங்களையும் மாஸ் நிறுத்தி வைத்துள்ளது.

கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட விமான பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும் லண்டன், பாரிஸ் சார்லஸ் டி கோலே விமான நிலையத்திற்குச் செல்லும் மற்ற அனைத்து விமானங்களும் தற்போதைக்கு கால அட்டவணையில் உள்ளன என்று அந்த விமான நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மோதல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அப்பால் மாற்று வழிகளில் விமானங்கள் இயக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset