நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசிய குடிமக்கள் கத்தாரில் பாதுகாப்பாக உள்ளனர்

 கோலாலம்பூர்: 

இன்று ஈரான் ஏவிய சில ஏவுகணைகள் கத்தாரின் வான்வழி பாதுகாப்பு அமைப்பால் தடுத்து நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, கத்தாரில் உள்ள மலேசிய குடிமக்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அந்த இடைமறிப்பு நடவடிக்கையின்போது வானில் சில வெடிப்புச் சத்தங்கள் கேட்கப்பட்டதாக விஸ்மா புத்ரா தெரிவித்துள்ளது.

“தற்போது எந்த மரணம், காயம் அல்லது சேதமும் பதிவாகவில்லை. கத்தாரில் உள்ள சுமார் 6,200 மலேசிய குடிமக்களும் பாதுகாப்பாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“கத்தாரின் நிலைமை அமைதியாகவும் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும் உள்ளது. அனைத்து மலேசியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தூதரகம் ஐந்து அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது,” என்ற தகவல் கிடைத்துள்ளது.

மேலும், வான்வழிப் போக்குவரத்து தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும், நிலைமை வழக்க நிலைக்கு திரும்பும் வரை மலேசியர்கள் தங்களது பயணங்களை ஒத்திவைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், தூதரகம் தொடர்ந்து நிலைமையைக் கண்காணித்து, அவ்வப்போது மலேசிய அரசுக்கு தகவல்களைப் புதுப்பித்து வழங்கும்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset