செய்திகள் மலேசியா
மிதக்கும் தேர் திருவிழாவான மாசி மக தெப்ப தேர் திருவிழாவில் நெகிழியை பயன்படுத்தாதீர்: பக்தர்களுக்கு வேண்டுகோள்
தெலுக் பஹாங்:
மார்ச் 2, 2026 அன்று பினாங்கின் தெலுக் பஹாங்கில் கொண்டாடப்படும் மிதக்கும் தேர் திருவிழாவான மாசி மக தெப்ப விழா கொண்டாட்டத்தின் போது எந்த வகையான செயற்கை நுரைப்பம் பொருட்கள் அல்லது நெகிழி தட்டுக்களை பயன்படுத்த வேண்டாம் என்று பினாங்கு மாநில வீட்டுவசதி, சுற்றுச்சூழல் பிரிவு, பினாங்கு பயனீட்டாளர் சங்கம், பினாங்கு மாநில பசுமை மன்றம், மலேசிய இந்து சங்கம் பினாங்கு மாநில பேரவை, தெலுக் பஹாங்கில் உள்ள ஸ்ரீ சிங்கமுக காளியம்மன் கோயில் நிர்வாகம் ஆகியவை, இந்து பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன.
தெலுக் பஹாங்கில் உள்ள 120 ஆண்டுகள் பழமையான சிங்கமுக காளியம்மன் கோயிலில் கொண்டாடப்படும் வருடாந்திர மிதக்கும் தேர் ஊர்வலம், லட்சக்கணக்கான பக்தர்களை ஈர்க்கும் ஒரு கடலோர விழாவாகும்.
இந்த விழாவின் போது, கோயில் தெய்வங்களை சுமந்து செல்லும் விளக்குகள், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மிதக்கும் தேர் கடல் சுற்றுப்பயணத்திற்கு அழைத்துச் செல்லப்படும்.
பாரம்பரியமாக, ஆயிரக்கணக்கான பக்தர்கள் ரத யாத்திரையின் போது ஒரு வேண்டுதலை வெளிப்படுத்திய பிறகு, கடலில் மிதக்க அலங்கரிக்கப்பட்ட விளக்குகளை மிதக்க விடுவர்.
இந்த அலங்கரிக்கப்பட்ட விளக்குகள் பொதுவாக ஸ்டைரோஃபோம் என்ற நுரைப்பம், பாலிஸ்டிரீன் போன்ற நெகிழி பொருட்களில் தயாரிக்கப்பட்ட தட்டுக்களை பக்தர்கள் பயன்படுத்துகின்றனர்.
ஏனெனில் இவை தண்ணீரில் எளிதாக பயணிக்கின்றன.

கடந்த காலத்தில், ஊர்வலத்திற்கு அடுத்த நாள் கடலில் மிதக்கும் நூற்றுக்கணக்கான செயற்கை நுரை சார்ந்த பொருட்களைக் காண முடிந்தது.
நுரைப்பம், நெகிழி பொருட்கள் கடல் சுற்றுச்சூழல் அமைப்பை அச்சுறுத்தும் முக்கிய கடல் மாசுபடுத்திகளாகும்.
மீன், ஆமைகள் போன்ற கடல்வாழ் உயிரினங்களால் இவை தவறாக உணவாக உட்கொள்ளப்படுகின்றன, அவற்றை சேதப்படுத்துகின்றன அல்லது கொல்கின்றன.
கடல் மாசுபாட்டைத் தடுக்கவும், கடல்வாழ் உயிரினங்களுக்கு ஏற்படும் பாதகமான விளைவுகளைத் தடுக்கவும், பினாங்கு மாநில அரசு, பினாங்கு பயனீட்டாளர் சங்கம், பினாங்கு பசுமை இயக்கம், பினாங்கு இந்து சங்க பேரவை, கோயில் நிர்வாகம் ஆகியவை பக்தர்கள் விளக்குகளுக்கு ஸ்டைரோஃபோம் என்ற நுரைப்பம் அல்லது எந்த வகையான பாலிஸ்டிரீன் அல்லது நெகிழி அடிப்படையிலான பொருட்களையும் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றன.
கோயில் நிர்வாகம் கடந்த ஆண்டுகளில் சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்று வழிகளை ஊக்குவித்து வருகிறது, இந்த ஆண்டும் கோயில் சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்று வழிகளை ஏற்பாடு செய்து வருகிறது.
கடவுள், இயற்கை அன்னை, கடல் வழங்கும் வாழ்வாதாரத்திற்காக நன்றி தெரிவிப்பதற்காக இந்த விழா இருப்பதால், திருவிழாவை மிகவும் அர்த்தமுள்ளதாக மாற்ற சுற்றுச்சூழல் நட்பு அணுகுமுறைகள் எடுக்கப்படுவது பொருத்தமானது என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் கல்வி அதிகாரி சுப்பாராவ் கூறினார்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
February 27, 2026, 10:57 pm
அனைத்துலகத் தமிழர் சித்தர் மரபு மாநாடு; சித்தர் மரபுகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும்: டத்தோ சிவக்குமார்
February 27, 2026, 9:26 pm
பாகான் டத்தோவில் இனம், மதம், மொழி பாராமல் மாணவர்களின் கல்வி மேம்பாட்டில் கவனம் செலுத்தப்படுகிறது: ஜாஹித்
February 27, 2026, 6:54 pm
உலக அரங்கில் மின்னும் கின்றாரா தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்களை டத்தோஸ்ரீ ரமணன் பாராட்டினார்
February 27, 2026, 6:37 pm
அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சிகளில் ஈடுபடவில்லை: நைய்மா காலித்
February 27, 2026, 6:19 pm
விஜயலட்சுமியின் இறப்பு சான்றிதழ், இழப்பீட்டை அரசு விரைந்து வழங்க கோரிக்கை
February 27, 2026, 5:45 pm
பாகான் டத்தோவில் 1,000 இந்திய மாணவர்களுக்கு கல்வி உதவி நிதி: துணைப் பிரதமர் வழங்கினார்
February 27, 2026, 5:24 pm
காரும் ட்ரைலரும் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்
February 27, 2026, 3:15 pm
“காவல்துறையினர் லஞ்சம் பெறவில்லை”: போலிஸ் அதிகாரி முஹம்மத் ரோஸ்டி தாவூத்தின் விளக்கம்
February 27, 2026, 2:43 pm
