செய்திகள் சிந்தனைகள்
இறைவனிடம் எதுவரை கேட்டு கொண்டே இருக்க வேண்டும்? எங்கு நிறுத்திக் கொள்ள வேண்டும்? - வெள்ளிச் சிந்தனை
*பலருக்கும் ஒரு சந்தேகம் இருக்கிறது*
இறைவனிடம் எதுவரை கேட்டு கொண்டே இருக்க வேண்டும்?
எங்கு நிறுத்திக் கொள்ள வேண்டும்?
இதற்கு இறுதி என்பது இருக்கா?
இறையச்சம் உள்ள மனிதனுக்கு அல்லாமா இக்பாலுடைய பதில்.
மனிதனுக்கு ஒரு லட்சியம் இருக்க வேண்டும்.
அந்த லட்சியத்தை அடைந்த பிறகு மீண்டும் ஒரு லட்சியத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அது அடைந்த பிறகு மீண்டும் ஒரு லட்சியத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு லட்சியம் அடைய அடைய புதிய லட்சியங்களை தேடி போக வேண்டும்.
நீ நதியை அடைந்த பிறகு கடலை அடைய லட்சியம் கொள் என்று இக்பால் கூறுகிறார்.
இறைவன் கூறுகிறான்.
நீ நடந்து வந்தால் நான் உன் பக்கம் ஓடி வருவேன்.
இறைவன் பக்கம் ஓடி செல்ல வேண்டும் என்ற லட்சியம் நம்மிடம் இருக்க வேண்டும்.
ஒரு இறையச்சம் உள்ள மனிதனுக்கு சுவனம் செல்ல வேண்டும் என்ற ஒரு லட்சியம் இருக்கும். சுவனம் சென்ற பிறகு இறைவனை அடைய ஆசைப்படுவது போல் ஒவ்வொரு இலட்சியத்தை அடைய அடைய அடுத்தடுத்த லட்சியத்தை நோக்கி செல்ல வேண்டும். என்று மகாகவி அல்லாமா இக்பால் கூறுகிறார்.
*Manzil se aage badkar Manzil ko Talaash kar*
*Mil jaaye tujhko Nadhi agar samandar ko talaash kar*
- முனைவர் நஹஸ் மாலா
தமிழில்: ஜொஹரா சுல்தான்
தொடர்புடைய செய்திகள்
August 2, 2026, 6:46 am
இஸ்ரேலால் பழிவாங்கப்பட்ட ஸ்பெய்ன்
July 24, 2026, 9:25 am
உங்கள் ஒவ்வொரு அசைவும் இயந்திரங்களால் கண்காணிக்கப்படும்போது... வெள்ளிச்சிந்தனை
July 3, 2026, 8:22 am
வாசிப்பும் வழிபாடுதான்... - வெள்ளிச் சிந்தனை
June 26, 2026, 7:57 am
“கீழே இறக்கியே தீருவான்” - வெள்ளிச் சிந்தனை
June 19, 2026, 7:24 am
மூளையைப் பாதுகாக்க இறைவன் செய்துள்ள ஏற்பாடுகள் பற்றி தெரியுமா? - வெள்ளிச் சிந்தனை
June 12, 2026, 9:23 am
இயற்கை வளங்களை இறைவனின் படைப்பாகக் கருதுங்கள் - வெள்ளிச் சிந்தனை
May 30, 2026, 9:03 pm
