நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அந்நியத் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை; உள்ளூர் மக்களின் பிழைப்பில் மண் போட வேண்டாம்: டத்தோ கலைவாணர்

சிரம்பான்:

அந்நியத் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை வழங்குவதன் வாயிலாக உள்ளூர் மக்களின் பிழைப்பில் மண் போட வேண்டாம்.

நம்பிக்கை இயக்கத்தின் தலைவர் டத்தோ டாக்டர் கலைவாணர் இதனை வலியுறுத்தினார்.

சிரம்பான் லாபு மாபெரும் கட்டுமான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பல முன்னணி நிறுவனங்கள் கூட்டமைப்பில் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நாட்டின் வளர்ச்சிக்கு மேம்பாட்டுத் திட்டங்கள் அவசியமானது. இத்திட்டங்களை நான் எதிர்க்கவில்லை.

ஆனால் இந்த திட்டத்தில் வேலை செய்பவர்கள் அனைவரும் அந்நியத் தொழிலாளர்கள் ஆவர்.

கிட்டத்தட்ட 3 ஆயிரம் பேர் வேலை செய்கிறார்கள்.

இதில் பெரும்பாலானோர் சட்டவிரோதமாக வேலை செய்வதாக எனக்கு புகார் கிடைத்துள்ளது.

குறிப்பாக கட்டுமான வேலைகளை தவிர்த்து லோரி, பெரிய பெரிய இயந்திரங்களை இயக்குவது அந்நிய நாட்டினர்கள் தான் என கூறப்படுகிறது.

இதன் அடிப்படையில் தான் இன்று நாங்கள் அதிருப்தியை வெளிப்படுத்துகிறோம்.

ஒரு கடையில் சட்டவிரோத அந்நியத் தொழிலாளர்கள் வேலை செய்தால் முதலாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

ஆனால் இதுபோன்ற பெரிய நிறுவனங்களில் வேலை செய்யும் சட்டவிரோத அந்நியத் தொழிலாளர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படுவது இல்லை.

இதில் ஏன் பாரபட்சம் பார்க்கப்படுகிறது என்று எனக்கு தெரியவில்லை.

ஆக இவ்விவகாரத்திற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

இதன் அடிப்படையில் தான் நாங்கள் இம்முயற்சியை எடுத்துள்ளோம் என்று டத்தோ கலைவாணர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset