நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ரமலான் சந்தைகளில் வெளிநாட்டவர் செய்யும் வியாபாரம்: குடிநுழைவு துறை கண்காணிப்பு தீவிரம்

புத்ராஜெயா: 

சில ரமலான் சந்தைகள் வெளிநாட்டவர்களால் நடத்தப்பட்டு வருவது கண்டறியப்பட்டுள்ளதாக மலேசிய குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதிகளில் இத்தகைய செயல்பாடுகள் கண்காணிப்பில் உள்ளன என அதன் தலைமை இயக்குநர் டத்தோ சகாரியா ஷாபான் கூறினார்.

சில வெளிநாட்டவர்கள் தங்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள் சிறிய அளவில் வணிகம் செய்து வருவதாக குடிநுழைவு துறையினது சோதனைகளில் அம்பலமானது.

மேலும், ஐக்கிய நாட்டின், அகதி ஆணையத்தின் அடையாள அட்டையை வைத்திருப்பவர்களும் இதில் ஈடுபட்டிருப்பதாக டத்தோ சகாரியா கூறினார்.

செல்லுபடியாகும் அட்டை கொண்டவர்களுக்கு சட்டரீதியான நடவடிக்கை எடுக்க முடியாத நிலை இருப்பதால் அது ஒரு கட்டுப்பாடாக உள்ளது எனவும் விளக்கினார்.

ரமலான் மாதம் முழுவதும் சந்தைகளில் வணிகம் செய்கிற வெளிநாட்டவர்களைப் பற்றிய சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார். சில உள்ளூர் நபர்கள் சட்டவிரோதமாக வெளிநாட்டவர்களை வேலைக்கு அமர்த்தியதும் கண்டறியப்பட்டுள்ளது.

ரமலான் தொடங்கியதிலிருந்து மேற்கொண்ட நடவடிக்கைகளில் கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதிகளில் 23 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset