செய்திகள் மலேசியா
அமைச்சகங்களின் செயல்திறன் கண்காணிப்பு தீவிரம்: பிரதமர் அன்வார் இப்ராஹிம்
கோலாலம்பூர்:
தற்போதைய அமைச்சரவை நேர்மையுடன் செயல்பட்டு, நிர்ணயிக்கப்பட்ட முக்கிய செயல்திறன் குறியீடுகளின் அடிப்படையில் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றுகின்றன என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
நேர்மை மீறல் ஏற்பட்டால் எந்த சமரசமும் இல்லை என அரசின் நிலைப்பாடு உறுதியானது என்றும் அவர் வலியுறுத்தினார்.
பொறுப்புணர்ச்சி என்பது தண்டனை மட்டுமல்ல; திருத்தம், தொடர்ச்சியான மேம்பாடு, மக்களுக்கான நெறிப்பொறுப்பும் அதில் அடங்கும் என அவர் கூறினார்.
"எனவே, ஒவ்வொரு அமைச்சகமும் உண்மையிலேயே திறம்பட, நம்பகத்தன்மையுடன் செயல்படுவதை உறுதி செய்வதற்காக உயர் செயல்திறன், நேர்மையின் கலாச்சாரம் தொடர்ந்து வலுப்படுத்தப்படும்," என்று அவர் நாடாளுமன்ற வலைத்தளத்தில் கூறினார்.
தேசிய ஊழல் எதிர்ப்பு திட்டம் தொடர்ந்து வலுப்படுத்தப்பட்டு வருவதாகவும், தேசிய தணிக்கைத் துறை, ஊழல் எதிர்ப்பு குறித்த அமைச்சரவை சிறப்பு குழுவும் மேலும் பலப்படுத்தப்படுவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
அமைச்சரவை உறுப்பினர்கள் அனைவரும் அரசியலமைப்பின் அடிப்படையில், பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்ற உறுதியை மடானி அரசு வலியுறுத்துகிறது எனவும் அவர் கூறினார்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
February 26, 2026, 10:57 am
சட்டவிரோத குடியேற்றம்: 65 வயது முதியவர் மீது கடும் குற்றச்சாட்டு
February 26, 2026, 7:00 am
பிப்ரவரி 26 முதல் மார்ச் 4 வரை தீபகற்ப மலேசியாவில் டீசல், RON97 பெட்ரோல் ஐந்து சென் உயர்ந்துள்ளது
February 25, 2026, 5:37 pm
இஸ்லாம் குறித்து அவமதிப்பான பதிவு: தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்ட பல்கலைக்கழக மாணவர்
February 25, 2026, 5:36 pm
சோதனையைத் தவிர்க்க முயன்ற இரு மலேசியர்கள் சிங்கப்பூரில் கைது: போதைப்பொருள் பறிமுதல்
February 25, 2026, 5:34 pm
குடியிருப்பு வழித்தடத்தில் 13 வயது சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்டார்
February 25, 2026, 5:32 pm
டாருல் அமான் பஜாரில் தீ விபத்து: 5 கூடாரங்கள் சாம்பல்
February 25, 2026, 4:47 pm
மாலை 6 மணி வரை இடியுடன் கனமழை பெய்யும்: மலேசிய வானிலைத் துறை எச்சரித்துள்ளது
February 25, 2026, 4:02 pm
39 வயதுடைய பெண்மணியின் சடலம் கெடா நதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
February 25, 2026, 3:51 pm
