நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

39 வயதுடைய பெண்மணியின் சடலம் கெடா நதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

அலோர் ஸ்டார்: 

செவ்வாய்க்கிழமை காலை, செபராங் பும்பாங் பள்ளிவாசல் அருகே கெடா நதி பகுதியில் 39 வயதுடைய பெண்ணி ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

கோத்தா ஸ்டார் மாவட்ட காவல்துறைத் தலைவர், உதவி ஆணையாளர் சையத் பஸ்ரி சையத் அலி தெரிவித்ததாவது, காலை 8 மணியளவில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டு, 8.27 மணியளவில் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

விசாரணையில், இறந்தவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது கணவரிடமிருந்து பிரிந்து தனிமையில் இருந்ததாகவும், அவருக்கு மூன்று மகன்கள் இருப்பதும் தெரியவந்தது. அவர்கள் தற்போது கூலிமில் உள்ள அவரது முன்னாள் கணவரால் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

இறந்தவருக்கு மனநிலை சிக்கல்கள் இருந்ததும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

தற்போதைய ஆய்வில் எந்தவொரு குற்றச்சாட்டும் கண்டறியப்படவில்லை என்பதையும், சம்பவம் இயற்கையான மரணமாகும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset