செய்திகள் மலேசியா
39 வயதுடைய பெண்மணியின் சடலம் கெடா நதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
அலோர் ஸ்டார்:
செவ்வாய்க்கிழமை காலை, செபராங் பும்பாங் பள்ளிவாசல் அருகே கெடா நதி பகுதியில் 39 வயதுடைய பெண்ணி ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
கோத்தா ஸ்டார் மாவட்ட காவல்துறைத் தலைவர், உதவி ஆணையாளர் சையத் பஸ்ரி சையத் அலி தெரிவித்ததாவது, காலை 8 மணியளவில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டு, 8.27 மணியளவில் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
விசாரணையில், இறந்தவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது கணவரிடமிருந்து பிரிந்து தனிமையில் இருந்ததாகவும், அவருக்கு மூன்று மகன்கள் இருப்பதும் தெரியவந்தது. அவர்கள் தற்போது கூலிமில் உள்ள அவரது முன்னாள் கணவரால் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.
இறந்தவருக்கு மனநிலை சிக்கல்கள் இருந்ததும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.
தற்போதைய ஆய்வில் எந்தவொரு குற்றச்சாட்டும் கண்டறியப்படவில்லை என்பதையும், சம்பவம் இயற்கையான மரணமாகும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
February 25, 2026, 5:37 pm
இஸ்லாம் குறித்து அவமதிப்பான பதிவு: தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்ட பல்கலைக்கழக மாணவர்
February 25, 2026, 5:36 pm
சோதனையைத் தவிர்க்க முயன்ற இரு மலேசியர்கள் சிங்கப்பூரில் கைது: போதைப்பொருள் பறிமுதல்
February 25, 2026, 5:34 pm
குடியிருப்பு வழித்தடத்தில் 13 வயது சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்டார்
February 25, 2026, 5:32 pm
டாருல் அமான் பஜாரில் தீ விபத்து: 5 கூடாரங்கள் சாம்பல்
February 25, 2026, 4:47 pm
மாலை 6 மணி வரை இடியுடன் கனமழை பெய்யும்: மலேசிய வானிலைத் துறை எச்சரித்துள்ளது
February 25, 2026, 3:51 pm
பேரரசர் பெயரில் போலி பிரசாரம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு
February 25, 2026, 3:48 pm
‘கார்ப்பரேட் மாஃபியா’ குற்றச்சாட்டை மறுத்தது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் - SPRM
February 25, 2026, 3:47 pm
