செய்திகள் மலேசியா
டிக் டோக் நேரலையில் நோன்பை அவமதித்த பெண்: இஸ்லாமிய சமய விவகாரத்துறை விசாரணை
சிரம்பான்:
கடந்த ஞாற்றுக்கிழமை டிக் டோக் வலைத்தள நேரலையில் நோன்பின் போது உணவு உட்கொண்ட பெண்ணை நெகிரி செம்பிலான் மாநில இஸ்லாமிய சமய ஆவணங்கள் துறை (JHEAINS) விசாரணை செய்து வருகிறது.
இஸ்லாமிய மதத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் 27 வயதான அப்பெண் கோலா பிலாவில் நேற்று கைது செய்யப்பட்டு, தற்போது 1992 ஆம் ஆண்டின் நெகிரி செம்பிலான் மாநிலச் சட்டத்தின்படி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்று JHEAINS தலைமை இயக்குநர் டத்தோ முஹம்மத் அஸ்ரி அப்துல்லா கூறினார்.
“சம்பந்தப்பட்ட காணொலியில் அந்தப் பெண் மாலை 6.45 மணியளவில் டிக்டாக் நேரலையில் வெளிப்படையாக உணவு, பானம் எடுத்துக் கொண்டார்,” என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
மக்கள், குறிப்பாக இஸ்லாமியர்கள், மதத்தின் உணர்வுகளை மதித்து புனிதமான ரமலான் மாதத்தில் நல்ல நடத்தையைக் காட்டுவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று முஹம்மத் அஸ்ரி அறிவுறுத்தினார்.
மேலும், மாநிலத்தில் உள்ள அனைத்து இஸ்லாமிய சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளும் இஸ்லாமிய சட்டங்களுக்கேற்ப நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்வதில் JHEAINS கவனம் செலுத்தும் என வலியுறுத்தியுள்ளது.
முன்னதாக, சமூக ஊடகங்களில், ஒரு பெண் தனது டிக்டாக் நேரலையில் வெளிப்படையாக தண்ணீர் குடித்ததாக காணொலி பரவியது குறிப்பிடத்தக்கது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
February 25, 2026, 5:37 pm
இஸ்லாம் குறித்து அவமதிப்பான பதிவு: தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்ட பல்கலைக்கழக மாணவர்
February 25, 2026, 5:36 pm
சோதனையைத் தவிர்க்க முயன்ற இரு மலேசியர்கள் சிங்கப்பூரில் கைது: போதைப்பொருள் பறிமுதல்
February 25, 2026, 5:34 pm
குடியிருப்பு வழித்தடத்தில் 13 வயது சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்டார்
February 25, 2026, 5:32 pm
டாருல் அமான் பஜாரில் தீ விபத்து: 5 கூடாரங்கள் சாம்பல்
February 25, 2026, 4:47 pm
மாலை 6 மணி வரை இடியுடன் கனமழை பெய்யும்: மலேசிய வானிலைத் துறை எச்சரித்துள்ளது
February 25, 2026, 4:02 pm
39 வயதுடைய பெண்மணியின் சடலம் கெடா நதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
February 25, 2026, 3:51 pm
பேரரசர் பெயரில் போலி பிரசாரம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு
February 25, 2026, 3:48 pm
