செய்திகள் இந்தியா
150 பயணிகளுடன் பறந்த தில்லி விமானத்தில் இயந்திர கோளாறு: அவசரமாக தரையிறக்கபட்டது
புதுடெல்லி:
இந்தியத் தலைநகர் தில்லியில் இருந்து லேவுக்கு புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம் என்ஜின் கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டது.
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் போயிங் 737 ரக விமானம் தில்லி சர்வதேச விமானத்தில் இருந்து லே விமான நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை காலை 6.45 மணியளவில் புறப்பட்டுள்ளது.
இந்த விமானத்தில் 150 பயணிகள் இருந்த நிலையில், புறப்பட்ட சில நிமிடங்களில் விமானத்தின் இரண்டாவது என்ஜினில் பிரச்னை இருப்பதை விமானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, ’முழு அவசர தரையிறக்க’த்துக்கு விமானக் கட்டுப்பாட்டு அறையிடம் அனுமதி கோரப்பட்டது. உடனடியாக தில்லி விமான நிலையத்தில் அனைத்துப் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு விமானத்தை தரையிறக்க உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து, எவ்வித அசம்பாவிதமும் இன்றி விமானத்தை விமானிகள் பாதுகாப்பாக தரையிறக்கினர்.
விமானத்தில் இருந்த அனைத்துப் பயணிகளும் பாதுகாப்பாக இருப்பதாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் என்ஜின் கோளாறு எதனால் ஏற்பட்டது என்பது குறித்து விமானப் போக்குவரத்து அமைச்சகம் விசாரணை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
February 24, 2026, 6:32 am
டெல்லி நோக்கிச் சென்ற விமானம் விழுந்து நொறுங்கியது: ஒருவர் உயிரிழந்தார்
February 19, 2026, 5:14 pm
சீன நாட்டு ரோபோவைத் தங்களின் கண்டுபிடிப்பாகக் காட்சிப்படுத்திய இந்தியப் பல்கலைக்கழகம்
February 17, 2026, 12:39 pm
நள்ளிரவில் யானை தாக்குதல்: மூன்று மாதக் குழந்தை உட்பட ஆறு பேர் பலி
February 16, 2026, 12:32 am
இந்தியா தேசிய விரைவுச் சாலைகளுக்கான சுங்கக் கட்டண விதிகளில் மாற்றம்: இன்று முதல் புதிய நடைமுறை அமல்
February 11, 2026, 4:17 am
அஜித்பவார் விமான விபத்தில் சதி: உறவினர் ரோகித்பவார் அடுக்கடுக்கான கேள்விகள்
February 10, 2026, 12:58 pm
செஷல்ஸுக்கு 17.50 கோடி டாலர் சிறப்பு பொருளாதார தொகுப்பு: இந்தியப் பிரதமர் மோடி அறிவிப்பு
February 6, 2026, 1:07 pm
