செய்திகள் இந்தியா
நள்ளிரவில் யானை தாக்குதல்: மூன்று மாதக் குழந்தை உட்பட ஆறு பேர் பலி
ஹசாரிபாக்:
இந்தியாவில் உள்ள ஹசாரிபாக் மாவட்டத்தில், நள்ளிரவில் கிராமத்திற்குள் புகுந்த 18 யானைகள் வீடுகளை மிதித்து தாக்கியதில் மூன்று மாதக் குழந்தை உட்பட ஆறு பேர் உயிரிழந்தனர். மேலும் ஒரு குழந்தை கடுமையாக காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது.
தூங்கிக் கொண்டிருந்த மக்களை இலக்காகக் கொண்டு நடந்த இந்த திடீர் தாக்குதலில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்ததாக வனத்துறை அதிகாரி உறுதிப்படுத்தினார்.
யானைகள் மக்களின் வீடுகளையும் பொருட்களையும் முற்றாக சேதப்படுத்தியதால், கிராமம் முழுவதும் பெரும் அழிவு ஏற்பட்டது.
இந்த சம்பவத்துக்குப் பிறகு கிராம மக்கள் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக பொகாரோ, ராம்கர், ஹசாரிபாக் பகுதிகளில் யானைகள் சுற்றித் திரிவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எச்சரிக்கை ஒலிபெருக்கிகள் அமைக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்த குடும்பங்களுக்கு அரசு விதிகளின்படி இழப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 13, 2026, 5:31 pm
ஆசியாவின் சிறந்த உணவகங்கள் பட்டியல்: 7 இந்திய உணவகங்கள் இடம்பிடித்து சாதனை
March 12, 2026, 5:32 pm
ஹார்முஸ் நீரிணை விவகாரம்: இந்திய கப்பல் போக்குவரத்துக்கு ஈரான் கட்டுப்பாடு
March 12, 2026, 5:30 pm
நள்ளிரவில் தீ விபத்து: டெல்லி மேற்கு பகுதியில் மீன் சந்தை தீக்கிரை
March 12, 2026, 11:03 am
விஷ வாயுக் கசிவு: கழிவுநீர் குழாயில் உயிரிழந்த இரு பணியாளர்கள்
March 12, 2026, 10:35 am
காஷ்மீரின் முன்னாள் முதல்வர் பாரூக் அப்துல்லா மீது கொலை முயற்சி: துப்பாக்கிச் சூடு தவிர்க்கப்பட்டது
March 11, 2026, 11:47 pm
தாய்லாந்தில் ஏர் இந்தியா விமானத்தின் டயர் வெடித்து விபத்து: பயணிகள் பத்திரமாக மீட்பு
March 11, 2026, 10:57 am
மேற்கு ஆசிய மோதலின் தாக்கம்: விமான எரிபொருள் கட்டணம் உயர்வு
March 10, 2026, 6:13 pm
கால்வாயில் வீசப்பட்ட ரூ.2 லட்சத்தை மீட்டுத் தந்த தீயணைப்பு வீரர்கள்
March 10, 2026, 5:11 pm
