நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சட்டவிரோத ஆலயங்களை சுத்தம் செய்யும் உத்தரவை பிரதமர் திரும்பப் பெற வேண்டும்: அம்பிகா, சுரேந்திரன் வலியுறுத்தல்

கோலாலம்பூர்:

சட்டவிரோத ஆலயங்களை சுத்தம் செய்யும் உத்தரவை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் திரும்பப் பெற வேண்டும்.

வழக்கறிஞர்களான அம்பிகா, சுரேந்திரன் இதனை வலியுறுத்தினர்.

சட்டவிரோதமாக கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களை சுத்தம் செய்ய உள்ளூர் அதிகாரிகளுக்கு பிறப்பித்த உத்தரவை அவர் திரும்பப் பெற வேண்டும்.

டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் உத்தரவு முன்னோடியில்லாதது.

அதில் கடுமையான தாக்கங்கள் இருப்பது தெளிவாகத் தெரிகிறது என்று அவர்கள் கூறினர்.

முதலாவதாக, ஒரு கோயில் சட்டவிரோதமாக நிலத்தை ஆக்கிரமித்துள்ளது என்பதை நீதிமன்றம் மட்டுமே உறுதியாகத் தீர்மானிக்க முடியும்.

மேலும் அதை இடிக்க நீதிமன்ற உத்தரவு தேவை.

எந்தவொரு சூழ்நிலையிலும் கோயில் நிர்வாகத்தை அத்துமீறி நுழைந்தவர்கள் என்று முத்திரை குத்தி போலிசார்  நடவடிக்கைக்கு உட்படுத்தக்கூடாது.

தனியார் நிலத்தை உள்ளடக்கியதாக இருந்தால் சுயமாகத் தொடங்கப்பட்ட நடவடிக்கை அல்லது விழிப்புணர்வு அனுமதிக்கப்படும் என்ற வாதமும் ஆதாரமற்றது என்று அம்பிகாவும் சுரேந்திரனும் இன்று ஒரு கூட்டு அறிக்கையில் தெரிவித்தனர்.

- பார்த்திபம் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset