செய்திகள் மலேசியா
மக்களால் வழங்கப்பட்ட ஆணையை அம்னோ சட்டமன்ற உறுப்பினர்கள் மதிக்க வேண்டும்: அந்தோனி லோக்
சிரம்பான்:
மாநில அரசை அமைப்பதற்காக, கடந்த மாநிலத் தேர்தலில் மக்களால் வழங்கப்பட்ட ஆணையை அம்னோ மதிக்க வேண்டும்.
ஜசெக பொதுச் செயலாளர் அந்தோனி லோக் இதனை கூறினார்.
அக்கட்சி ஆட்சியாளர், அரசியலமைப்பு கொள்கையை இன்னும் நிலைநிறுத்த வேண்டும்.
ஆக நெகிரி செம்பிலான் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமினுடின் ஹரூண் வழக்கம் போல் தனது கடமைகளைத் தொடர்ந்து ஆதரிக்க வேண்டும்.
மேலும் அமினுடின் தற்காலிக மந்திரி புசாராக இருப்பதற்கு ஜசெக முழு ஆதரவைத் தெரிவிக்கிறது.
இந்தப் பதவியின் தொடர்ச்சியும், அரசாங்கத்தின் தொடர்ச்சியும் பாதுகாக்கப்பட வேண்டும்.
நம்பிக்கை கூட்டணி, தேசிய முன்னணி என்பது மக்களால் வழங்கப்பட்ட ஒரு ஆணை.
அம்னோ ஆதரவைத் திரும்பப் பெறும்போது, நெகிரி செம்பிலான் மக்களின் ஆணையை அவர்கள் மதிக்கவில்லை என்று அர்த்தம்.
ஒரு மறைமுக அரசாங்கத்தை அமைக்க எந்தக் கட்சிக்கும் நாங்கள் ஆதரவளிக்க மாட்டோம்
இன்று சிரம்பானில் உள்ள மந்திரி புசாரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் அமினுடினுடன் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 27, 2026, 8:11 pm
இறுதித் தெளிவு கிடைக்கும் வரை மந்திரி புசார் பதவியிலிருந்து விலக மாட்டேன்: அமினுடின்
April 27, 2026, 5:04 pm
பெர்மாஸ் பகுதியில் உள்ள இந்திய சமூக தன்னார்வ தொண்டு நிறுவனத் தலைவர்களுடனான சந்திப்பு
April 27, 2026, 4:56 pm
மே தின விடுமுறை - உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச் சாவடிகளில் கடும் நெரிசல் ஏற்படலாம்
April 27, 2026, 4:23 pm
சைட் சாடிக் விடுதலையாவாரா அல்லது சிறையில் அடைக்கப்படுவாரா?: ஜூன் 30ஆம் தேதி தீர்ப்பு
April 27, 2026, 4:22 pm
