நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நெகிரி மந்திரி புசாருக்கான ஆதரவு வாபஸ்; 14 சட்டமன்ற உறுப்பினர்கள் தாங்களாகவே முடிவை எடுத்தனர்: ஜாஹித்

கோலாலம்பூர்:

நெகிரி செம்பிலானில் 14 சட்டமன்ற உறுப்பினர்கள் மந்திரி புசார் அமினுடின் ஹரூணுக்கு அளித்து வந்த ஆதரவைத் திரும்பப் பெறும் முடிவு அவர்களுடைய சொந்தமான முடிவாகும்.

இருப்பினும், அவர்களின் நடவடிக்கைகள் குறித்து எனக்குத் தெரிவிக்கப்பட்டது.

மிகக் குறுகிய காலத்தில் அவர்கள் என்ன திட்டமிட்டுள்ளனர். என்ன அறிவித்துள்ளனர் என்பது எனக்கு தெரியும்.

தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி இதனை கூறினார்.

இது ஒரு மாநில அரசின் முடிவு.

எனால் இறுதி முடிவு என்னிடமிருந்து தான் வரும் என்று அவர்கள் என்னிடம் கூறினார்கள்.

அம்னோ, தேசிய முன்னணி தலைமை இந்த முடிவையும், இத்தகைய நடவடிக்கையின் அரசியல் தாக்கங்களையும் ஆராயும்

கோலாலம்பூர் உலக வர்த்தக மையத்தில் ஊடகங்களிடம் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset