நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மே தின விடுமுறை - உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச் சாவடிகளில் கடும் நெரிசல் ஏற்படலாம்

ஜோகூர் பாரு:

எதிர்வரும் தொழிலாளர் தின விடுமுறையை முன்னிட்டு உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச் சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என்று சிங்கப்பூர் குடிநுழைவு, சோதனைச்சாவடிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

இம்மாதம் ஏப்ரல் 30ஆம் தேதி முதல் மே 3ஆம் தேதி வரை இரு சோதனைச் சாவடிகளிலும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அண்மையில் புனித வெள்ளி விடுமுறையின்போது (3 ஏப்ரல்) 1.4 மில்லியனுக்கும் மேற்பட்டோர் உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச் சாவடிகளைக் கடந்து மலேசியாவுக்கு சென்றதாக அமைப்பு கூறியது.

ஏப்ரல் 4ஆம் தேதி மட்டும் கிட்டதட்ட 500,000 பேர் கடந்துசென்றனர்.

உச்ச நேரங்களில் வாகனத்தில் சென்ற பயணிகள் 3 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் உலகளாவிய பாதுகாப்புச் சூழலைக் கருத்திற்கொண்டு சோதனைச் சாவடிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset