நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நஜிப் தனது வீட்டுக் காவல் மேல்முறையீட்டை திரும்பப் பெற்ற விவகாரம்: விளக்கமளிக்க ஷாபி மறுப்பு

புத்ராஜெயா:

டத்தோஶ்ரீ  நஜிப் தனது வீட்டுக் காவல் மேல்முறையீட்டை திரும்பப் பெற்றது குறித்து அவரின் வழக்கறிஞர் ஷாபி அப்துல்லா மறுத்து விட்டார்.

முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், முன்னாள் தலைமை வழக்கறிஞர் அஹ்மத் தெரிருதீன் சல்லேவுக்கு எதிராக வீட்டுக் காவல், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கான அனுமதி கோரி  மேல்முறையீடு செய்திருந்தார்.

இந்நிலையில் அந்த மேல்முறையீட்டை டத்தோஶ்ரீ நஜீப்  திரும்பப் பெற்றுள்ளார்.

அவர் ஏன் திரும்பப் பெற்றார் என்பதை விளக்க வழக்கறிஞர் டான்ஶ்ரீ ஷாபி அப்துல்லா மறுத்துவிட்டார்.

எனக்குத் தெரியாத சில விஷயங்கள் உள்ளன. என்னால் கருத்து தெரிவிக்க முடியாது. எனக்குத் தெரியாது.

சரியான கூற்று இதுதான். என்னால் கருத்து தெரிவிக்க முடியாது என்று நீதிமன்ற நடவடிக்கைகளுக்குப் பிறகு இங்கு செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset