நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இறுதித் தெளிவு கிடைக்கும் வரை மந்திரி புசார் பதவியிலிருந்து விலக மாட்டேன்: அமினுடின்

சிரம்பான்:

இறுதித் தெளிவு கிடைக்கும் வரை நெகிரி செம்பிலான் மந்திரி புசார் பதவியிலிருந்து விலக மாட்டேன்.

மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமினுடின் ஹரூண் இதனை கூறினார்.

நெகிரி செம்பிலான் மந்திரி புசார் பதவிக்கு தனக்கு அளித்து வந்த ஆதரவை 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்கள் திரும்பப் பெற்ற போதிலும், வழக்கம் போல் தொடர்ந்து பணியாற்றுவேன்.

நெகிரி செம்பிலான் ஆளுநர் துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவிர் முன்னிலையில் நான் ஆஜரானேன்.

மாநில சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் போன்ற இறுதித் தெளிவு ஏற்படும் வரை நிர்வாகத்தைத் தொடருமாறு தனக்கு உத்தரவிடப்பட்டதாக அவர் கூறினார்.

முறையாகப் பரிசீலித்த பின்னர், இறுதித் தெளிவு ஏற்படும் வரை மந்திரி புசாராக எனது பொறுப்புகளை நிறைவேற்றுமாறு துவாங்கு அறிவுறுத்தி உத்தரவிட்டார்.

மக்களின் நலன்களுக்கு முன்னுரிமை அளித்து, மாநில அரசு வழக்கம் போல் தொடர்ந்து செயல்படும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset