நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஹோர்முஸ் நீரிணையில் அனைத்துக் கப்பல்களையும் அமெரிக்கக் கடற்படை மடக்கும்: டிரம்ப் திடீர் அறிவிப்பு

வாஷிங்டன்:

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் (Donald Trump) ஹோர்முஸ் நீரிணையில் செல்லும் எல்லாக் கப்பல்களையும் அமெரிக்கக் கடற்படை மடக்கும் என்று திடிரென்று கூறியிருக்கிறார்.

மலேசிய நேரப்படி இன்றிரவு 10 மணி முதல் முற்றுகை நடப்புக்கு வரும் என்று அமெரிக்கா குறிப்பிட்டது.

பெரிய அளவில் இடையூறுகள் ஏற்படலாம் என்று அஞ்சப்படுகிறது.

சீனா, இந்தியா, பாகிஸ்தான், தாய்லந்து, மலேசியா போன்ற நாடுகளின் கப்பல்கள் இதுவரை தடங்கலின்றி செல்ல அனுமதிக்கப்பட்டன. இனி அவையும் தடுக்கப்படலாம் என்று தெரிகிறது.

வர்த்தக விநியோகம் மேலும் தடைபடும். உலகெங்கும் பொருளாதார அதிர்வுகள் கடுமையாகும் என்று அஞ்சப்படுகிறது.

ஹோர்முஸ் நீரிணைக்கு ராணுவக் கப்பல்கள் வந்தால் அது சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் செயல் என்று ஈரானிய ராணுவம் எச்சரித்தது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset