நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பியூஃபோர்டில் வெள்ளம் பாதிப்பு: 9 பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டன

பியூஃபோர்ட்: 

சுமார் ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், இங்குள்ள ஒன்பது பள்ளிகள் இன்று மூடப்பட்டன.

மாநில கல்வித் துறை இயக்குநர் டத்தோ டாக்டர் ரெய்சின் சைடின், தெரிவித்ததாவது, எட்டு பள்ளிகளின் வளாகத்தில் நீர் புகுந்ததாலும், பள்ளிகளுக்குச் செல்லும் பாதைகள் வெள்ளத்தால் மறிக்கப்பட்டதால் அவை மூடப்பட்டன என்று கூறினார்.

கிளியாஸ் பாரு தேசிய பள்ளி, சுவாசா தேசிய பள்ளி, லாகோ தேசிய பள்ளி, மெம்பகர் தேசிய பள்ளி, பத்து 60 தேசிய பள்ளி, கபாஜாங் தேசிய பள்ளி, ஜபாங் தேசிய பள்ளி, தேசிய இடைநிலைப் பள்ளியான செயின்ட் பால் ஆகிய எட்டு பள்ளிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இதற்கிடையில், மலேசிய உயர்நிலைப் பள்ளி சான்றிதழ் (STPM) மறு தேர்வில் ஈடுபட்டுள்ள தேர்வு கண்காணிப்பாளர்களை அழைத்து வருவதற்கு கல்வித் துறை மலேசிய தீயணைப்பு மீட்புத் துறையின் உதவியை நாட வேண்டியிருந்தது என்று ரைசின் கூறினார். தேர்வு மையமாக இருந்த தேசிய இடைநிலைப்பள்ளியான காடோங்கிற்குச் செல்லும் பாதை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதால் இது நிகழ்ந்தது என்று அவர் கூறினார்.

சுங்கை படாஸ் கரைபுரண்டு ஓடியதால் 18 கிராமங்கள் பாதிக்கப்பட்ட நிலையில், மாவட்ட பேரிடர் மேலாண்மை குழு வெள்ளப் பேரிடரை அறிவித்துள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பியூஃபோர்டும் சிபிடாங்கும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இரண்டு மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset