நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஃப்ரீமேசன் ஆதரவாளராக மூத்த பேராசிரியர் மீது குற்றச்சாட்டு:விசாரணையைத் தொடங்கியுள்ளது மலாயா பல்கலைக்கழகம்

கோலாலம்பூர்: 

மலாயா பல்கலைக்கழகத்தின் (UM) மூத்த பேராசிரியர் ஒருவர் ஃப்ரீமேசன் அமைப்பின் ஆதரவாளராக இருப்பது தொடர்பாகச் சமூக ஊடகங்களில் பரவியுள்ளதை அடுத்து UM உள்நிலை விசாரணையைத் தொடங்கியுள்ளது.

 இந்த விவகாரம் தொடர்பாக முழுமையான தகவல்களைப் பெறவும், முன்வைக்கப்பட்டச் குற்றச்சாட்டுகளை ஆராயவும் விசாரணை மேற்கொள்ளப்படுவதாக UM வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“இந்த விசாரணை, நடைமுறையில் உள்ள சட்ட விதிகள், பல்கலைக்கழக ஒழுங்குமுறைகளுக்கு இணங்க  நடத்தப்படும் என பல்கலைக்கழகம் உறுதி அளிக்கிறது" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சமீபத்தில், இணையப்பயனர்கள் பகிர்ந்த பதிவுகளில், UM-இன் ஒரு பேராசிரியர் தன்னை வெளிப்படையாக ஃப்ரீமேசன் அமைப்பின் உறுப்பினராகக் கூறியதுடன், மதுபானம் அருந்தியதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இது தொடர்பான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், பொதுமக்கள் பொறுமையுடன் காத்திருக்கவும், உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பரப்பவோ அல்லது ஊகங்களை உருவாக்கவோ தவிர்க்குமாறு UM அறிவுறுத்தியுள்ளது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset