நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ரவாங்கில் ஆலயம் உடைப்பு; 4 பேர் கைது: போலிஸ்

ரவாங்:

சிலாங்கூர், ரவாங்கில் உள்ள ஒரு ஆலயம் உடைக்கப்பட்டது தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக நான்கு பேரை போலிசார் கைது செய்தனர்.

சிலாங்கூர் மாநில போலிஸ் தலைவர் டத்தோ ஷசாலி கஹார் இதனை கூறினார்.


அந்தப் பகுதியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட ஒரு ஆலயத்தை இடிப்பது தொடர்பாக உள்ளூர்வாசி ஒருவரிடமிருந்து பெறப்பட்ட புகாரைத் தொடர்ந்து இந்த கைதுகள் மேற்கொள்ளப்பட்டன.

சுத்தப்படுத்தும் பணி மேற்கொள்ளப்படுவதற்கு முன்பு, உள்ளூர் அதிகாரிகள், புகார்தாரருக்கு எந்த விவாதமும் இல்லாமல், அறிவிப்பும் இல்லாமல் கோயிலின் ஒரு பகுதி இடிக்கப்பட்டது விசாரணையில் கண்டறியப்பட்டது.

கைது செய்யப்பட்ட நான்கு பேரும் 26 முதல் 39 வயதுடையவர்கள்.

அவரது குழுவினர் ஒரு விவசாய டிராக்டரையும் (பேக்ஹோ) பறிமுதல் செய்ததாகவும் ஷாசாலி கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset