செய்திகள் இந்தியா
இந்தியாவில் 7 வயது முதல் 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் ஆதார் பயோமெட்ரிக் பதிவுகளை புதுப்பிக்க வேண்டும்: இதுவரை 83000 பள்ளிகளில் 1 கோடி மாணவர்கள் புதுப்பித்துள்ளனர்
புதுடெல்லி:
இந்தியாவில் ஐந்து வயது முதல் 15 வயதை கடந்த குழந்தைகளுக்கு ஆதாரில் கைரேகைகள், கருவிழித் தகவல்களை புதுப்பிப்பது கட்டாயமாகும்.
இதனால், 7 முதல் 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் ஆதார் பயோமெட்ரிக் பதிவுகளை புதுப்பிக்க கடந்த அக்டோபர் 1 முதல் ஒரு வருடத்திற்கு எந்த கட்டணமும் இல்லாமல் இலவசமாக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) பள்ளிகளில் சிறப்பு முகாம்களையும் நடத்தி வருகிறது.
இது குறித்து யுஐடிஏஐ நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘இதுவரை சிறப்பு முகாம்களில் நாடு முழுவதும் 83 ஆயிரம் பள்ளிகளில் 1 கோடிக்கும் மேற்பட்ட மாணவர்களின் பயோமெட்ரிக் பதிவுகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
இந்த முகாம்கள் தொடர்ந்து அடுத்தடுத்த பள்ளிகளில் நடத்தப்படும். நாடு முழுவதும் உள்ள ஆதார் பதிவு மையங்கள், ஆதார் சேவா கேந்திராங்களிலும் பயோமெட்ரிக் புதுப்பிக்கலாம்’ என கூறப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
March 13, 2026, 5:31 pm
ஆசியாவின் சிறந்த உணவகங்கள் பட்டியல்: 7 இந்திய உணவகங்கள் இடம்பிடித்து சாதனை
March 12, 2026, 5:32 pm
ஹார்முஸ் நீரிணை விவகாரம்: இந்திய கப்பல் போக்குவரத்துக்கு ஈரான் கட்டுப்பாடு
March 12, 2026, 5:30 pm
நள்ளிரவில் தீ விபத்து: டெல்லி மேற்கு பகுதியில் மீன் சந்தை தீக்கிரை
March 12, 2026, 11:03 am
விஷ வாயுக் கசிவு: கழிவுநீர் குழாயில் உயிரிழந்த இரு பணியாளர்கள்
March 12, 2026, 10:35 am
காஷ்மீரின் முன்னாள் முதல்வர் பாரூக் அப்துல்லா மீது கொலை முயற்சி: துப்பாக்கிச் சூடு தவிர்க்கப்பட்டது
March 11, 2026, 11:47 pm
தாய்லாந்தில் ஏர் இந்தியா விமானத்தின் டயர் வெடித்து விபத்து: பயணிகள் பத்திரமாக மீட்பு
March 11, 2026, 10:57 am
மேற்கு ஆசிய மோதலின் தாக்கம்: விமான எரிபொருள் கட்டணம் உயர்வு
March 10, 2026, 6:13 pm
கால்வாயில் வீசப்பட்ட ரூ.2 லட்சத்தை மீட்டுத் தந்த தீயணைப்பு வீரர்கள்
March 10, 2026, 5:11 pm
