நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சொக்சோவின் 24 மணி நேர பாதுகாப்பு திட்டம் 2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் செயல்படுத்தப்படும்: டத்தோஸ்ரீ ரமணன்

கோலாலம்பூர்:

சொக்சோவின் 24 மணி நேர பாதுகாப்பு திட்டம் 2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் செயல்படுத்தப்படும்.

மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனை கூறினார்.

முழுமையான திட்டமிடல் செயல்முறை ஏற்கெனவே உள்ள திட்டங்களுடன் ஒருங்கிணைப்புக்குப் பிறகு இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.

இந்த முயற்சியை செயல்படுத்துவதற்கு தற்போது நடைபெற்று வரும் பிற சமூகப் பாதுகாப்புக் கொள்கைகள், திட்டங்களுடன் இணங்குவதை உறுதிசெய்ய கவனமாக நடவடிக்கைகள் தேவை.

ஆக முறையான ஆய்வுகளுக்கு பின் இத்திட்டம் அமலுக்கு என்று டத்தோஸ்ரீ ரமணன் கூறினார்.

இதனிடையே சொக்சோவின் தலைவர் டத்தோஸ்ரீ சுபஹான் கமல் கூறுகையில்,

இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டு அல்லது மூன்றாவது காலாண்டில் 24 மணி நேர பாதுகாப்பை செயல்படுத்த இலக்கு வைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் அல்லது மூன்றாவது காலாண்டில் இதை செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

கோலாலம்பூரில் நடைபெற்ற iLINDUNGi Sahabat Socso ஊடகவியலாளர்களுடனான மதிய உணவு நிகழ்ச்சிக்குப் பிறகு நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அவர் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset