செய்திகள் மலேசியா
பிலிப்பைன்ஸ் கடலில் பெரும் விபத்து: பயணிகள் கப்பல் மூழ்கியது
மணிலா:
தெற்கு பிலிப்பைன்ஸில் இன்று காலை 342 பயணிகளை ஏற்றிச் சென்ற ஒரு ஃபெர்ரி கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், குறைந்தது எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
பசிலான் அவசர உதவி அதிகாரி, ரொனாலின் பெரெஸ், குறைந்தது 138 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக ‘AFP’ செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
மேலும், 18 பேர் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் போதிய பணியாளர்கள் இல்லாததால் சிகிச்சை வழங்குவதில் சவால்கள் உள்ளதாக அவர் தெரிவித்தார்.
விபத்து நடந்தபோது அந்த ஃபெர்ரி, ஜம்போங்கா நகரிலிருந்து ஜோலோ தீவுக்குச் சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், பிலிப்பைன்ஸ் கடலோர காவல் படை, தெற்கு மின்டானாவோவில் தங்கள் நிலையங்களுடன் இணைந்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்று தெரிவித்தது.
- கிரித்திகா
தொடர்புடைய செய்திகள்
January 26, 2026, 11:00 pm
மூன்று வயது சிறுமியின் கொலை முயற்சி வழக்கு: தந்தைக்கு நீதிமன்றம் ஜாமீன் மறுப்பு
January 26, 2026, 10:52 pm
பேராவில் 11 ஆலயங்களில் தைப்பூச விழா ஆகம முறைப்படி நடைபெற வேண்டும்; மதுபான விற்பனைக்குத் தடை: சிவநேசன்
January 26, 2026, 10:44 pm
இளையோர் பாதுகாப்புக்கு புதிய சட்டம்: சமூக ஊடகப் பயன்பாட்டிற்கு 16 வயது வரம்பு நிர்ணயம்
January 26, 2026, 9:27 pm
வீணடிக்கப்பட்ட, திருடப்பட்ட கூடுதல் நிதியை திரும்பப் பெற முடியும்: பிரதமர் நம்பிக்கை
January 26, 2026, 7:05 pm
B40 குழந்தைகளுக்கு இலவச ஆரம்பக் கல்விக்கு முன்னுரிமை: துணைக் கல்வி அமைச்சர் பெனடிக்டைன்
January 26, 2026, 7:00 pm
பெட்ரோல் நிலையத்தில் மோதலில் ஈடுபட்டதாக வைரலான காணொலி: இருவரை போலீசார் தேடி வருகின்றனர்
January 26, 2026, 4:16 pm
டான்ஶ்ரீ மொஹைதின் யாசினின் நிலை குறித்து வியாழக்கிழமை தீர்மானிக்கப்படும்: தக்கியூடின்
January 26, 2026, 4:15 pm
