நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மூன்று வயது சிறுமியின் கொலை முயற்சி வழக்கு: தந்தைக்கு நீதிமன்றம் ஜாமீன் மறுப்பு

கோத்தா பாரு:

தனது மூன்று வயது மகளைக் கொலை செய்ய முயன்றதாகக் குற்றச்சாட்டில், 24 வயதுடைய முஹம்மத் ஹைரல் ஹுசைரி ஹஸ்மி என்பவர் இன்று செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.

நீதிபதி சுல்கிஃப்லி அப்துல்லாஹ் முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் குற்றம் ஏதும் செய்யவில்லை என மறுத்து விசாரணை கோரினார்.

இந்த சம்பவம், ஜனவரி 14, 2026 அன்று காலை 7 மணியளவில், பாசிர் பூத்தே அருகிலுள்ள கடற்படை துறைமுகம் பக்கத்தில், ஜாலான் பாக் மாயோங் பகுதியில் நடந்ததாக கூறப்படுகிறது.

இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் பிரிவு 307-இன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.

வழக்குத் தொடர்ச்சியை துணை அரசுத் தரப்பு வழக்கறிஞர் சித்தி ஹஜர் மஸ்லான் மேற்கொண்டார்.

குற்றஞ்சாட்டப்பட்டவரை வழக்கறிஞர் முஹம்மது சுல்பகர் அல் பாசிசியார் பிரதிநிதித்துவம் செய்தார்.

இந்த வழக்கில் ஜாமீன் வழங்கப்படவில்லை. அடுத்த விசாரணை தேதி பிப்ரவரி 25 என நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.

- கிரித்திகா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset