செய்திகள் மலேசியா
மஹிமாவில் இணையும் ஆலயங்கள், அரசு சாரா இயக்கங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு: டத்தோ சிவக்குமார்
பத்துமலை:
மஹிமாவில் இணையும் ஆலயங்கள், அரசு சாரா இயக்கங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
மஹிமாவின் தலைவர் டத்தோ ந. சிவக்குமார் இதனை கூறினார்.
பத்துமலையில் புதியதாக கட்டப்பட்டுள்ள சுவாமி மண்டபமும் வைகாசி விசாக உபயத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட தண்ணீர் பந்தலும் நேற்று திறப்பு விழா கண்டது.
அதே வேளையில் அருணகிரிநாதர் அருளிய நயவுரையுடன் கூடிய திருப்புகழ் நூலும் வெளியீடு கண்டது.
இம்மாபெரும் விழாவில் முக்கிய அங்கமாக கிட்டத்தட்ட 28 ஆலயங்களும் அரசு சாரா இயக்கங்களும் மஹிமாவில் இணைந்தன.
இணைந்த ஆலயம், இயக்கங்களுக்கு மஹிமா உறுப்பினர் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மஹிமாவில் இணைந்துள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை 1500ஆக உயர்ந்துள்ளது.
ஆலயங்களையும் அரசு சாரா இயக்கங்களையும் ஒன்றிணைக்கும் நோக்கில் தான் மஹிமா தொடங்கப்பட்டது.
இந்த இலக்கை அடைவதற்காக மஹிமா தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்று டத்தோ சிவக்குமார் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 18, 2026, 2:15 pm
தேசிய முன்னணிக்கு மக்களின் குரலாகவும் ஆதரவாகவும் பிபிபி கட்சி இருக்கும்: டத்தோ லோகபாலா
January 18, 2026, 1:40 pm
பிபிபி தேசிய முன்னணியில் உறுப்பு கட்சி: ஜாஹித் அறிவிப்பு
January 18, 2026, 10:02 am
அம்னோவை அரசாங்கத்திலிருந்து வெளியேற்றுவதற்காக சிவப்பு கைகள் முயற்சி: ஹசான்
January 18, 2026, 9:01 am
அன்வார் அம்னோவை நேசிப்பதுடன் கட்சியை நம்புகிறார்: ஜாஹித்
January 18, 2026, 8:40 am
நாடியா கெசுமா மாரடைப்பு காரணமாக ஜெட்டாவில் மரணமடைந்தார்
January 17, 2026, 9:25 pm
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் ஜனவரி 30ஆம் தேதி பத்துமலைக்கு வருகிறார்: டான்ஸ்ரீ நடராஜா
January 17, 2026, 2:24 pm
