செய்திகள் மலேசியா
லஞ்சம் வாங்கிய போலிஸ் அதிகாரிக்கு 4 நாட்கள் ரிமாண்ட்
ஜார்ஜ் டவுன்
RM20,000-க்கும் அதிகமான லஞ்சம் தொடர்பான வழக்கில் விசாரணைக்கு உதவுவதற்காக, உதவி போலீஸ் கண்காணிப்பாளர் (ASP) பதவியில் உள்ள ஒரு காவல் அதிகாரி, புதன்கிழமை முதல் நான்கு நாட்கள் ரிமாண்ட் செய்யப்படுகிறார்.
58 வயதுடைய அந்த நபருக்கு எதிரான ரிமாண்ட் உத்தரவை, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (SPRM) தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், மாஜிஸ்திரேட் நாத்ரதுன் நைம் முஹம்மது சயிடி பிறப்பித்தார்.
SPRM லாக்கப் உடையில் இருந்த அந்நபர், காலை 8.45 மணியளவில், நீதிமன்ற வளாகத்திற்கு கொண்டு வரப்பட்டார்.
செவ்வாய்க்கிழமை இரவு சுமார் 10.30 மணிக்கு, பினாங்கு SPRM அலுவலகத்தில் வாக்குமூலம் அளிக்க வந்தபோது அந்த ஆடவர் கைது செய்யப்பட்டார்.
“2016 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில், ஐந்து நபர்களிடமிருந்து மொத்தமாக RM20,000-க்கும் மேற்பட்டத் தொகையை லஞ்சமாக கேட்டும் பெற்றும் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
“அவர் பினாங்கு காவல் துறை தலைமையகம் (IPK) இல் இன்னும் பணியாற்றி வந்தார்,” என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில், கைது செய்வதற்கு முன் சந்தேகநபர் குறித்து SPRM உளவுத்துறை விசாரணை மேற்கொண்டதாகவும் தெரிவித்தது.
“இந்த வழக்கு, 2009 ஆம் ஆண்டு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டம் (Akta SPRM 2009) இன் பிரிவு 17(a)ன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது,”
- சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
January 13, 2026, 3:49 pm
போதைப்பொருள் கும்பலின் எச்சரிக்கை: புவேர்ட்டோ லோபஸில் ஐந்து தலைகள் வெட்டி தொங்கவிடப்பட்ட கொடூரம்
January 13, 2026, 3:32 pm
குளியலறையில் மறைக்கப்பட்ட கைப்பேசி: மாற்றுத் தந்தையின் அருவருப்பான செயல் வெளிச்சம்
January 13, 2026, 1:33 pm
சரவாக்கை முன்மாதிரியாக கொண்டு பள்ளி மாணவர்களுக்கு இலவச போக்குவரத்து வசதி வழங்க வேண்டும்: டத்தோ முருகையா
January 13, 2026, 11:54 am
பப்ளிக் கோல்ட் நிறுவனம் 14 சிறந்த சாதனையாளர்களை 3 மில்லியன் ரிங்கிட் வெகுமதிகளுடன் கௌரவித்தது
January 13, 2026, 11:37 am
மலாக்காவில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு ஏற்ற ஹோட்டல்: சமூக ஊடங்களில் வைரலாகி வருகிறது
January 13, 2026, 10:40 am
ஈரானின் வர்த்தக பங்காளிகள் 25 சதவீத வரிகளை எதிர்கொள்ள வேண்டும்: டிரம்ப்
January 13, 2026, 10:39 am
