செய்திகள் மலேசியா
தேசியக் கொடியை தலைகீழாக பறக்கவிட்ட அந்நிய நாட்டு ஆடவர் கைது
ஜொகூர்பாரு:
தேசியக் கொடியை தலைகீழாக பறக்க விட்ட அந்நிய நாட்டைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.
ஜொகூர் போலிஸ் தலைவர் அப்துர் ரஹ்மான் அர்சாத் இதனை தெரிவித்தார்.
ஜொகூர், கூலாய் மாவட்டத்தில் உள்ள ஒரு வளாகத்தில் மலேசியக் கொடி தலைகீழாக பறக்க விட்ட சம்பவம் சர்ச்சையாகியுள்ளது.
இது தொடர்பான விசாரணைகளுக்கு உதவுவதற்காக 38 வயது அந்நிய நாட்டு ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று மாலை 4 மணியளவில் மலேசியக் கொடி தலைகீழாக பறக்க விட்டதை காட்டும் ஒரு வைரல் வீடியோவை சமூக ஊடகங்களில் போலிஸ் கண்டறிந்தது.
கூலாய் மாவட்ட போலிஸ் படையின் குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த உறுப்பினர்கள் குழு ஆய்வு நடத்தி 38 வயது சீன நபரைக் கைது செய்தது என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 12, 2026, 10:23 pm
தமிழ்ப்பள்ளிகளில் முதலாம் ஆண்டில் 10,330 மாணவர்கள்: எண்ணிக்கை மீண்டும் சரிவு
January 12, 2026, 9:49 pm
பல்கலைக்கழகத்தில் ஏர்கோன்ட் கம்ப்ரசர் வெடித்ததில் ஒருவர் மரணம்: 9 பேர் காயம்
January 12, 2026, 9:38 pm
சுங்கைபீசி தமிழ்ப்பள்ளிக்கு பிரதமர் வருகை; கல்வி தேசிய முன்னுரிமை: டத்தோஸ்ரீ அன்வார்
January 12, 2026, 6:58 pm
1.08 மில்லியன் கிலோ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது: 20,000 பேர் கைது
January 12, 2026, 5:11 pm
குழந்தைகளின் கல்வி நாட்டின் முன்னுரிமை: பிரதமர் அன்வார்
January 12, 2026, 4:56 pm
சிலாங்கூர் மாநில அளவிலான பொங்கல் திருவிழா அம்பாங்கில் நடைபெறும்: பாப்பாராயுடு
January 12, 2026, 4:38 pm
12 ஆண்டுகளுக்கும் மேலாக போலி MyKad-ஐ பயன்படுத்திய இந்தோனேசிய ஆடவர் கைது
January 12, 2026, 3:28 pm
