செய்திகள் மலேசியா
டிவி 3இன் செய்தி சின்னத்தை பயன்படுத்தி போலியான பதிவு: எம்சிஎம்சி விசாரிக்கிறது
புத்ராஜெயா:
டிவி 3இன் செய்தி சின்னத்தை பயன்படுத்தி போலியான பதிவுகளை வெளியிட்ட விவகாரத்தை எம்சிஎம்சி விசாரிக்கிறது.
தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் தொடர்பான சமூக ஊடகங்களில் டிவி 3இன் செய்தி சின்னத்தை காட்சி அடையாளத்தைப் பயன்படுத்தி தவறான தகவல்களைப் பரப்புவது குறித்து இந்த விசாரணையைத் தொடங்கியுள்ளது.
டிக் டாக் மலேசியா மூடப்படுவது குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டார் என்ற தவறான தகவலை இது பரப்புகிறது.
முதற்கட்ட விசாரணையில் உள்ளடக்கம் மாற்றியமைக்கப்பட்டு போலியானது என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் அந்த அறிக்கை தகவல் தொடர்பு அமைச்சரால் ஒருபோதும் வெளியிடப்படவில்லை என்பதையும் அது வலியுறுத்தியது.
மீடியா பிரிமா பெர்ஹாட் நிறுவனமும் போலிஸ் புகார் அளித்துள்ளது.
அந்தப் பதிவை புலேட்டின் டிவி3 அல்லது நிறுவனத்தின் நெட்வொர்க்கின் கீழ் உள்ள எந்த செய்தி தளமும் வெளியிட்டதாக மறுத்துள்ளது.
டிவி 3இன் சின்னம், பெயர், காட்சி அடையாளத்தைப் பயன்படுத்துவது பொதுமக்களை தவறாக வழிநடத்தக்கூடிய ஒரு வகையான தவறான பயன்பாடு என்று எம்சிஎம்சி ஓர் அறிக்கையில் வலியுறுத்தியது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 30, 2025, 1:27 pm
1 எம்டிபி மீதான தண்டனையை எதிர்த்து நஜிப் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார்
December 30, 2025, 1:26 pm
திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் ரமேஸ் கும்பலைச் சேர்ந்த 20 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது
December 30, 2025, 12:25 pm
தேசியக் கூட்டணியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து அஸ்மின் அலி விலகல்
December 30, 2025, 12:25 pm
டான்ஸ்ரீ மொஹைதின் யாசினின் பதவி விலகல்: ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகிறது
December 30, 2025, 12:24 pm
ஆயர் தாவாரில் விசேஷ மண்டல பூர்த்தி பூஜை; விமரிசையாக நடைபெற்றது: அகிலன்
December 30, 2025, 10:49 am
மாணவர்கள் இனி டை அணிவது கட்டாயமில்லை: கல்வி அமைச்சகம்
December 30, 2025, 9:22 am
தேசியக் கூட்டணி தலைவர் பதவியில் இருந்து டான்ஸ்ரீ மொஹைதின் விலகல்
December 29, 2025, 10:50 pm
