செய்திகள் மலேசியா
டான்ஸ்ரீ மொஹைதின் யாசினின் பதவி விலகல்: ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகிறது
கோலாலம்பூர்:
டான்ஸ்ரீ மொஹைதின் யாசினின் பதவி விலகல் வரும் ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகிறது.
தேசியக் கூட்டணியை ஐந்து ஆண்டுகள் வழிநடத்திய பிறகு, டான்ஸ்ரீ மொஹைதின் யாசின் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
இந்த பதவி விலகல் வரும் ஜனவரி 1ஆம் தேதி அமலுக்கும் வரும் என அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
சற்று நேரத்திற்கு முன்பு முகநூலில் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையின் மூலம்,
முன்னாள் பிரதமர் தனது கூட்டணியின் தலைமையின் போது அனைத்து தலைவர்களும் அளித்த ஆதரவிற்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.
மொஹைதின் கடந்த 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 முதல் இக்கூட்டணியை வழிநடத்தி வருகிறார்.
அதாவது அக்கூட்டணி அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்ட தேதியிலிருந்து அவர் பொறுப்பு வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 30, 2025, 1:27 pm
டிவி 3இன் செய்தி சின்னத்தை பயன்படுத்தி போலியான பதிவு: எம்சிஎம்சி விசாரிக்கிறது
December 30, 2025, 1:27 pm
1 எம்டிபி மீதான தண்டனையை எதிர்த்து நஜிப் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார்
December 30, 2025, 1:26 pm
திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் ரமேஸ் கும்பலைச் சேர்ந்த 20 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது
December 30, 2025, 12:25 pm
தேசியக் கூட்டணியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து அஸ்மின் அலி விலகல்
December 30, 2025, 12:24 pm
ஆயர் தாவாரில் விசேஷ மண்டல பூர்த்தி பூஜை; விமரிசையாக நடைபெற்றது: அகிலன்
December 30, 2025, 10:49 am
மாணவர்கள் இனி டை அணிவது கட்டாயமில்லை: கல்வி அமைச்சகம்
December 30, 2025, 9:22 am
தேசியக் கூட்டணி தலைவர் பதவியில் இருந்து டான்ஸ்ரீ மொஹைதின் விலகல்
December 29, 2025, 10:50 pm
