செய்திகள் மலேசியா
நஜிப்பின் கூடுதல் உத்தரவை நிராகரிப்பு; மாமன்னர், ஆட்சியாளர்களின் நிலைப்பாட்டை கேள்வி எழுப்பும் அபாயம் உள்ளது: பாஸ்
கோலாலம்பூர்:
நஜிப்பின் கூடுதல் உத்தரவை நிராகரித்தது மாமன்னர், ஆட்சியாளர்களின் நிலைப்பாட்டை சவால் செய்யும் அபாயம் உள்ளது.
பாஸ் கட்சியின் பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ தக்கியூடின் ஹசான் இதனை கூறினார்.
அரச மன்னிப்பின் அதிகாரத்தையும் விருப்பத்தையும் நீதித்துறை அல்லது அதிகாரத்துவக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவருவதற்கான எந்தவொரு முயற்சியும் கூட்டரசு அரசியலமைப்பின் விதிகளை பெரிதும் மீறும் ஆற்றலைக் கொண்டுள்ளது.
16ஆவது மாமன்னரின் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கின் மீதமுள்ள சிறைத் தண்டனையை வீட்டுக் காவலில் அனுபவிக்க கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் நிராகரித்த முடிவைக் கட்சி தீவிரமாகக் கருதுகிறது.
மேற்கூறிய விதியின்கீழ் தனது விருப்புரிமை அதிகாரங்களைப் பயன்படுத்துவதில் மாமன்னர் எடுக்கும் எந்தவொரு முடிவு, உத்தரவு அரசியலமைப்பின் கட்டமைப்பிற்குள் தெளிவாக உள்ளது.
எனவே எந்தவொரு நிர்வாக தெளிவின்மை, ஆவண இழப்பு, தாமதமான வெளிப்படுத்தல் அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட சேர்க்கை ஆகியவற்றை எந்த வகையிலும் அரச நடவடிக்கையின் செல்லுபடியை நடுநிலையாக்கவோ, தாமதப்படுத்தவோ அல்லது கேள்விக்குட்படுத்தவோ முடியாது என்று தக்கியூடின் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 23, 2025, 3:41 pm
ஜொகூர் கிழக்குப் பகுதியில் தொடர் மழை எச்சரிக்கை: மெட் மலேசியா அறிவிப்பு
December 23, 2025, 1:04 pm
காணாமல் போன மீனவர் மரணமடைந்த நிலையில் மீட்பு
December 23, 2025, 12:18 pm
கூடுதல் உத்தரவு; அனைத்து தரப்பினரும் நீதிமன்ற தீர்ப்புகளை மதிக்க வேண்டும்: பிரதமர்
December 23, 2025, 10:54 am
வெளிநாட்டு வீட்டுப் பணியாளர்களைப் பாதுகாக்க புதிய சட்ட மசோதாவை இயற்ற வேண்டிய அவசியமில்லை: டத்தோஸ்ரீ ரமணன்
December 22, 2025, 11:06 pm
அன்வாருக்கு முடியும்; நஜிப்பிற்கு ஏன் முடியாது?: ஹசான் கேள்வி
December 22, 2025, 10:59 pm
கிள்ளானின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்; பாஸ்டர் பாவல் போனியின் சமூக சேவை தொடர வேண்டும்: சசிதரன்
December 22, 2025, 10:56 pm
