செய்திகள் மலேசியா
தேசிய முன்னணியில் நீடிப்பது குறித்து மஇகா முடிவெடுக்கவில்லை என்றால் நாங்களே முடிவெடுப்போம்: ஜாஹித்
பட்டர்வொர்த்:
தேசிய முன்னணியில் நீடிப்பது குறித்து மஇகா முடிவெடுக்கவில்லை என்றால் நாங்களே இறுதி முடிவை எடுப்போம் என்று தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி கூறினார்.
தேசிய முன்னணியின் உறுப்பு கட்சியாக மஇகா விளங்கி வருகிறது.
இருந்தாலும் அக் கட்சி தேசிய முன்னணியில் இருந்து விலகவுள்ளதாக தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.
குறிப்பாக தேசியக் கூட்டணியில் அக் கட்சி இணைவது தொடர்பான கடிதமும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இருந்தாலும் மஇகாவின் நிலை குறித்து தேசிய முன்னணி எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை.
காரணம் மஇகா இன்னமும் ஒரு நிலையான முடிவை எடுக்கவில்லை. என்னை பொறுத்தவரையில் மஇகா ஒரு முடிவை எடுக்க வேண்டும்.
இல்லையென்றால் தேசிய முன்னணியே இவ்விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கும்.
இது மசீசவுக்கும் பொருந்தும் என்று மலேசிய மக்கள் சக்தி கட்சியின் 17ஆவது பேராளர் மாநாட்டிற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி இவ்வாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 21, 2025, 3:52 pm
பிபாவின் தொழில்நுட்ப மேம்பாடு, புதுமை, மாற்றத்திற்கான சிறப்புக் குழுவில் டத்தோ சிவசுந்தரம் நியமனம்
December 21, 2025, 2:23 pm
மலேசிய மக்கள் சக்தி கட்சி, மஇகாவிற்கான மாற்று கட்சி அல்ல: டத்தோஸ்ரீ தனேந்திரன் உறுதி
December 21, 2025, 12:46 pm
மஇகா எந்த கட்சிக்கும் தடையாக இல்லை; ஜாஹித் பேசுவது பழைய கதை: டத்தோஸ்ரீ சரவணன் சாடல்
December 21, 2025, 12:15 pm
இந்தியர்களுக்கான புளூ பிரிண்ட் திட்டங்களை அமல்படுத்த மடானி அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பேன்: ஜாஹித்
December 21, 2025, 11:27 am
விசுவாசமும் கொள்கையும் இல்லாதவர்கள் தலைவராக இருக்க தகுதியற்றவர்கள்: ஜாஹித்
December 21, 2025, 10:02 am
டத்தோஸ்ரீ நஜிப்பின் விடுதலையை மடானி அரசு மீண்டும் மறுபரிசீலனை செய்ய வேண்டும்: டத்தோஸ்ரீ தனேந்திரன்
December 21, 2025, 9:15 am
