செய்திகள் மலேசியா
தமிழ்ப்பள்ளி, மாணவர்களின் நலனில் மடானி அரசு அக்கறை செலுத்துகிறது; பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்த வேண்டாம்: டத்தோஸ்ரீ ரமணன்
கோலாலம்பூர்:
தமிழ்ப்பள்ளி, மாணவர்களின் நலனில் மடானி அரசு தொடர்ந்து அக்கறை செலுத்தி வருகிறது.
ஆக அரசு மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்த வேண்டாம் என்று தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனை கூறினார்.
தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தகவல் தொழில் நுட்பத் துறையில் பின்னடைவை சந்திக்கக் கூடாது என்ற அடிப்படையில் புதிய திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் மித்ராவின் கீழ் தமிழ்ப்பள்ளிகளுக்கு திறன் பலகை எனும் ஸ்மார்ட் போர்ட் வழங்கப்பட்டு வருகிறது.
இதன் முதல் கட்டமாக 104 தமிழ்ப்பள்ளிகளுக்கு இன்று திறன் பலகை வழங்கப்பட்டது.
சிலாங்கூர், கூட்டரசுப் பிரதேச மாநிலங்களைச் சேர்ந்த பள்ளிகளுக்கு வழங்கப்பட்டது.
இந்த திறன் பலகை நிச்சயம் தமிழ்ப்பள்ளிகளுக்கு பெரும் பயனாக இருக்கும் என நம்புகிறேன்.
இதை தவிர்த்து தமிழ்ப்பள்ளி, அங்கு படிக்கும் மாணவர்களின் நலனில் மடானி அரசு தொடர்ந்து அக்கறை செலுத்தி வருகிறது.
தமிழ்ப்பள்ளிகளின் சீரமைப்பு, மாணவர்களின் கல்வி உட்பட பல திட்டங்களை அரசு மேற்கொண்டு வருகிறது.
இருந்தாலும் மடானி அரசு தமிழ்ப்பள்ளிகளுக்கும் இந்திய சமுதாயத்திற்கும் ஒன்றுமே செய்யவில்லை என குற்றம் சாட்டி வருகின்றனர்.
குறிப்பாக மித்ரா என்றாலே அரசாங்கத்தை குற்றம் சாட்டுவதை ஒரு சிலர் பிழைப்பாகவே நடத்தி வருகின்றனர்.
அவர்களின் இந்நடவடிக்கைகளுக்கு அரசியல் சுயநலமே முக்கிய காரணமாகும்.
ஆகவே இதுபோன்றவர்கள் உடனடியாக அரசு மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இதுவே எனது வேண்டுகோளாகும் என்று டத்தோஸ்ரீ ரமணன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 14, 2026, 4:51 pm
அனைத்து தமிழர்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்
January 14, 2026, 4:42 pm
பத்துமலையில் தேசிய ஒற்றுமை பொங்கல் விழா; ஜனவரி 17ஆம் தேதி விமரிசையாக நடைபெறும்: டான்ஸ்ரீ நடராஜா
January 14, 2026, 4:32 pm
தாய்லாந்து லாரியில் டீசலை மாற்ற முயற்சித்த நான்கு பேர் கைது
January 14, 2026, 3:56 pm
தலைநகர் பந்தாய் பாருவில் குடி நுழைவுத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை : 71 பேர் கைது
January 14, 2026, 3:37 pm
2026 மலேசிய சுற்றுலா வருகை ஆண்டில் இந்திய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்: டத்தோ மனோகரன்
January 14, 2026, 3:35 pm
தலைமை ஆசிரியரும், அவரின் மனைவியும் வீட்டில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தனர்
January 14, 2026, 3:27 pm
பராமரிப்பாளர் வீட்டிற்கு அனுப்பப்பட்ட மூன்று மாத குழந்தைக்கு கால் எலும்பு முறிவு
January 14, 2026, 12:58 pm
2026 மலேசிய சுற்றுலா வருகை ஆண்டை முன்னிட்டு SMS Deen Jewellers தங்க நாணயம் அறிமுகம் செய்தது
January 14, 2026, 12:26 pm
நெகிரி ஆட்சியாளர் சுல்தான் முஹ்ரிசின் 78-ஆவது பிறந்தநாளுக்கு பிரதமர் வாழ்த்து
January 14, 2026, 11:48 am
