செய்திகள் மலேசியா
530 தமிழ்ப்பள்ளிகளுக்கு 5,000 நித்திரைக் கதைகள் புத்தகங்களை கொண்டு சேர்ப்பதே மலேசிய முன்னாள் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சங்கப் பேரவையின் இலக்கு: குமரன்
கோலாலம்பூர்:
நாட்டில் உள்ள 530 தமிழ்ப்பள்ளிகளுக்கு 5,000 நித்திரைக் கதைகள் புத்தகத்தை கொண்டு சேர்ப்பதே மலேசிய முன்னாள் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சங்கப் பேரவையின் முதன்மை இலக்காகும்.
மலேசிய தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கங்களின் பேரவையின் துணைத் தலைவர் குமரன் கூறினார்.
மலேசிய தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கங்களின் பேரவையினர் இந்த வாசிப்பை நேசிப்போம் எனும் திட்டத்தை தொடங்கியுள்ளனர்.
அதன் அடிப்படையில் தான் நித்திரைக் கதைகள் எனும் புத்தகத்தை அறிமுகம் செய்யப்பட்டது.
ஆசிரியர்கள் முனைவர் கஸ்தூரி, நிரோசா ஆகியோர் 61கதைகள் கொண்டு இப்புத்தகத்தை எழுதியுள்ளனர்.
சிறப்பான முறையில் தயாராகி உள்ள இப் புத்தகம் அனைவரையும் சென்றடைய வேண்டும்.
மேலும் மக்களிடையே குறைந்து வரும் வாசிக்கும் பழக்கத்தை மீட்டெடுக்க இதுபோன்ற முயற்சிகள் மகத்தானது.
அதே வேளையில் இத்திட்டம் நாடு முழுவதும் கொண்டு சேர்க்க வேண்டு.
குறிப்பாக நாட்டில் உள்ள 530 தமிழ்ப்பள்ளிகளுக்கு 5,000 நித்திரைக் கதைகள் புத்தகத்தை கொண்டு சேர்க்க வேண்டும்.
இதன் மூலம் மலேசிய முன்னாள் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சங்கப் பேரவைக்கு நிதி திரட்டுவதும் முதன்மை நோக்கமாக உள்ளது.
இந்நிதியை கொண்டு தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிறைய திட்டங்களை மேற்கொள்ள வேண்டும்.
இதன் இலக்காக கொண்டே பேரவை செயல்படுகிறது என்று குமரன் கூறினார்.
இதனிடையே தமிழ்ப்பள்ளியில் பயின்ற மாணவர்கள் அதிகமானோர் வெளியே இருப்பார்கள்.
இவர்கள் முன்னாள் மாணவர்கள் சங்கத்தில் இணைந்திருப்பார்கள். அப்படி இணையாதவர்கள் அச்சங்கங்களில் இணையலாம்.
அச்சங்கங்களின் வாயிலாக இப்புத்தகங்களை வாங்கி பள்ளிகளுக்கு தரலாம்.
அல்லது முன்னாள் மாணவர்கள் நேரடியாக பள்ளிகளுக்கு புத்தகங்களை வாங்கி ஆதரவு தரலாம்.
எது எப்படி இருந்தாலும் இத்திட்டம் தமிழ்ப்பள்ளிக்கும் மாணவர்களுக்கு பயனளிக்கும் என்று திட்ட ஒருங்கிணைப்பாளர் பார்த்திபன் கூறினார்.
இது தொடர்பான மேல்விவரங்களுக்கு கேசவன் 012-3113343, பார்த்திபன் 017-6834685 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 14, 2026, 6:49 pm
தை பிறந்தால் வழி பிறக்கும்: டத்தோஸ்ரீ சரவணனின் பொங்கல் வாழ்த்து
January 14, 2026, 6:45 pm
நாட்டில் தமிழ் கல்வியைப் பாதுகாக்க கூட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்: டத்தோஸ்ரீ சரவணன்
January 14, 2026, 6:38 pm
பத்துமலை சுவாமி மண்டப திறப்பு விழாவுடன் திருப்புகழ் நூல் வெளியீடு காணவுள்ளது: டான்ஸ்ரீ நடராஜா
January 14, 2026, 4:51 pm
அனைத்து தமிழர்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்
January 14, 2026, 4:42 pm
பத்துமலையில் தேசிய ஒற்றுமை பொங்கல் விழா; ஜனவரி 17ஆம் தேதி விமரிசையாக நடைபெறும்: டான்ஸ்ரீ நடராஜா
January 14, 2026, 4:32 pm
தாய்லாந்து லாரியில் டீசலை மாற்ற முயற்சித்த நான்கு பேர் கைது
January 14, 2026, 3:56 pm
தலைநகர் பந்தாய் பாருவில் குடி நுழைவுத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை : 71 பேர் கைது
January 14, 2026, 3:37 pm
2026 மலேசிய சுற்றுலா வருகை ஆண்டில் இந்திய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்: டத்தோ மனோகரன்
January 14, 2026, 3:35 pm
தலைமை ஆசிரியரும், அவரின் மனைவியும் வீட்டில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தனர்
January 14, 2026, 3:27 pm
