செய்திகள் மலேசியா
பேராக்கில் நடந்த பயிற்சி விமான விபத்தில் 2 பேர் காயம்
தைப்பிங்:
பேராக்கில் நடந்த பயிற்சி விமான விபத்தில் 2 பேர் காயமடைந்தனர்.
தைப்பிங் போலிஸ் தலைவர் முகமது நசீர் இஸ்மாயில் இதனை தெரிவித்தார்.
தைப்பிங்கில் உள்ள டெக்கா விமான நிலையத்திற்கு அருகிலுள்ள திறந்தவெளிப் பகுதியில் சிறிய வகை விமானம் விபத்துக்குள்ளானது.
இந்த விமானத்தில் பறந்து கொண்டிருந்த ஒரு விமானியும் அவரது பயிற்சியாளரும் காயமடைந்தனர்.
நேற்று காலை 10.30 மணியளவில் அவசர அழைப்பு வந்ததைத் தொடர்ந்து, மைக்ரோலைட் விமானம் தொடர்பான தகவல் போலிசாருக்கு கிடைத்தது.
விமானம் இயந்திரக் கோளாறால் பாதிக்கப்பட்டது.
இதனால் திறந்தவெளிப் பகுதியில் அவசரமாக தரையிறங்க வேண்டியிருந்தது என்று அவர் கூறினார்.
கண்காணிப்பு, ஆரம்ப மதிப்பீட்டை மேற்கொள்ள காவல்துறையினர் குழு சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டது.
பாதிக்கப்பட்ட 46 வயது, 40 வயதுடைய இருவர் சிகிச்சைக்காக தைப்பிங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
மேலும் அவர்களின் உடல்நிலை சீராக உள்ளது என்று அவர் கூறினார் என்று அவர் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 10, 2025, 8:59 pm
தேசிய போலிஸ்படை தலைவருடனான சந்திப்பு இந்திரா காந்திக்கு ஏமாற்றத்தை அளித்தது
December 10, 2025, 8:58 pm
சீ விளையாட்டுப் போட்டியில் மலேசியாவுக்கு இரண்டாவது தங்கம்
December 10, 2025, 8:57 pm
மக்களின் பிரச்சினைகளுக்கு அமைச்சர் ங்கா கோர் மிங் பதில் சொல்ல வேண்டும்: டத்தோ டாக்டர் கலைவாணர்
December 10, 2025, 8:56 pm
இந்திய சமுதாயத்திற்கான மித்ராவின் இலக்கு மாறவில்லை: டத்தோஸ்ரீ ரமணன்
December 10, 2025, 2:32 pm
மூன்று இந்திய இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: குடும்ப உறுப்பினர்களிடம் போலிஸ் வாக்குமூலம் பதிவு
December 10, 2025, 2:31 pm
ஆறு மாதங்கள் ஏன் காத்திருக்க வேண்டும் என்பதற்கு ஜசெக பதிலளிக்க வேண்டும்: டத்தோ ராஜசேகரன்
December 10, 2025, 2:09 pm
இரண்டாம் தவணைக்கு செனட்டராக இன்று பதவியேற்றதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன்: சரஸ்வதி
December 10, 2025, 11:53 am
