செய்திகள் மலேசியா
எல்லைப் பதட்டங்களை தாய்லாந்து, கம்போடியா உடனடியாக தணித்துக் கொள்ள வேண்டும்: மலேசியா வலியுறுத்து
புத்ராஜெயா:
எல்லைப் பதட்டங்களை தாய்லாந்து, கம்போடியா உடனடியாக தணித்துக் கொள்ள வேண்டும்.
வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முஹம்மத் ஹசான் இதனை வலியுறுத்தினார்.
தாய்லாந்து, கம்போடிய எல்லையில் நிலவும் சூழ்நிலையைத் தணிக்க வேண்டும்.
முன்னர் அடைந்த அமைதி முயற்சிகளைப் பாதிக்கக்கூடிய சம்பவங்களைத் தவிர்க்கவும் அனைத்து தரப்பினரும் உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு மலேசியா கேட்டுக்கொள்கிறது.
தாய்லாந்து-கம்போடிய எல்லையில் ஏற்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றங்களை மலேசியா தீவிரமாக எடுத்துக் கொள்கிறது.
வட்டார அமைதி, ஸ்திரத்தன்மை, செழிப்பு ஆகியவை மலேசியாவின் முதன்மையான முன்னுரிமைகளாக உள்ளன என்பதை புத்ராஜெயா வலியுறுத்தியதாக அவர் கூறினார்.
கடந்த ஜூலை 28ஆம் தேதி போர்நிறுத்த ஒப்பந்தம், ஆகஸ்ட் 7ஆம் தேதி பொது எல்லைக் குழு (ஜிபிசி) கூட்டம், அக்டோபர் 26ஆம் தேதி கையெழுத்திடப்பட்ட கேஎல் அமைதி ஒப்பந்தம் மூலம் இரு நாடுகளின் உறுதிப்பாடுகளையும் மலேசியா அங்கீகரிக்கிறது என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 10, 2025, 8:59 pm
தேசிய போலிஸ்படை தலைவருடனான சந்திப்பு இந்திரா காந்திக்கு ஏமாற்றத்தை அளித்தது
December 10, 2025, 8:58 pm
சீ விளையாட்டுப் போட்டியில் மலேசியாவுக்கு இரண்டாவது தங்கம்
December 10, 2025, 8:57 pm
மக்களின் பிரச்சினைகளுக்கு அமைச்சர் ங்கா கோர் மிங் பதில் சொல்ல வேண்டும்: டத்தோ டாக்டர் கலைவாணர்
December 10, 2025, 8:56 pm
இந்திய சமுதாயத்திற்கான மித்ராவின் இலக்கு மாறவில்லை: டத்தோஸ்ரீ ரமணன்
December 10, 2025, 2:32 pm
மூன்று இந்திய இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: குடும்ப உறுப்பினர்களிடம் போலிஸ் வாக்குமூலம் பதிவு
December 10, 2025, 2:31 pm
ஆறு மாதங்கள் ஏன் காத்திருக்க வேண்டும் என்பதற்கு ஜசெக பதிலளிக்க வேண்டும்: டத்தோ ராஜசேகரன்
December 10, 2025, 2:09 pm
இரண்டாம் தவணைக்கு செனட்டராக இன்று பதவியேற்றதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன்: சரஸ்வதி
December 10, 2025, 11:53 am
