செய்திகள் தமிழ் தொடர்புகள்
பாம்பனில் புயல்: தனுஷ்கோடியிலிருந்து மக்கள் வெளியேற்றம்
தனுஷ்கோடி:
தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் டிட்வா புயல் காரணமாக, ராமேஸ்வரத்தின் பாம்பனில் சூறைக்காற்று வீசி வருகிறது. தங்கச்சிடம் பகுதியில் குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனுஷ்கோடி பகுதியிலிருந்து சுற்றுலா பயணிகள், வியாபாரிகள், மக்கள் அனைவரும் காவல்துறையினரால் பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் புயல் காரணமாக ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் சூறைக்காற்று வீசி வருகிறது. ஏற்கனவே மணிக்கு 10 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்த டிட்வா புயல், கடந்த சில மணி நேரங்களாக 3 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.
மாலை 4 மணி நிலவரப்படி, புதுச்சேரிக்கு 410 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தெற்கில் 500 கி.மீ. தொலைவிலும் டிட்வா புயல் நிலவுகிறது. இது வடக்கு - வட மேற்கு திசையில் நகர்ந்து நவ. 30ஆம் தேதி வட தமிழகம் அருகே நிலவும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
புயல் காரணமாக, ராமேஸ்வரத்திலிருந்து புறப்படும் ஓகா விரைவு ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ராமேஸ்வரம் - எழும்பூர் இடையே இயக்கப்படும் சேது விரைவு ரயில் மண்டபத்திலிருந்து புறப்படும்.
நாளை மதியம் 3 மணிக்கு கிளம்ப வேண்டிய ராமேஸ்வரம் - திருச்சி ரயில் மானாமதுரையிலிருந்து புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 24, 2026, 12:48 pm
தமிழகத்தில் 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
May 22, 2026, 11:25 am
தமிழ் முஸ்லிம் எழுத்தாளர்களின் கால்நூற்றாண்டு சிறுகதைத் தொகுப்புகள்
May 21, 2026, 5:18 pm
பதவியேற்பு நிகழ்வில் இன்றும் தமிழ்த்தாய் வாழ்த்து பின்னுக்கு தள்ளப்பட்டது
May 21, 2026, 4:35 pm
தமிழக அமைச்சராகிறார் ஷாஜகான்: காதர் மொஹைதீன் அறிவிப்பு
May 21, 2026, 1:05 pm
தவெக அமைச்சரவையில் இடம்பெற்ற 2 காங். எம்எல்ஏக்கள் உள்பட 23 பேர்
May 20, 2026, 9:42 pm
தவெக அமைச்சரவையில் ஐயூஎம்எல்?: காதர் மொஹைதீன் விளக்கம்
May 20, 2026, 12:02 pm
ஹஜ்ஜுப்பெருநாள் வர்த்தகம்: மேலப்பாளையம் சந்தையில் ஒரே நாளில் ரூ. 3 கோடிக்கு ஆடுகள் விற்பனை
May 19, 2026, 9:10 pm
