நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மோயோக்கில் வேட்பாளரின் வெற்றியை உறுதி செய்ய நம்பிக்கை கூட்டணி, தேசிய முன்னணி ஒத்துழைப்பு வலுப்படுத்துகிறது: டத்தோஸ்ரீ ரமணன்

கோத்தா கினபாலு:

மோயோக்கில்  வேட்பாளரின் வெற்றியை உறுதி செய்ய நம்பிக்கை கூட்டணி, தேசிய முன்னணி ஒத்துழைப்பு வலுப்படுத்துகிறது.

கெஅடிலான் உதவித் தலைவர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனை கூறினார்.

17ஆவது சபா மாநிலத் தேர்தல் இவ்வார இறுதியில் நடைபெறவுள்ளது.

இதில் நம்பிக்கை கூட்டணி வேட்பாளர் ரெமிஸ்டா ஜிம்மி டெய்லர் மோயோக் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார்.

அவரின் வெற்றியை உறுதி செய்வதற்காக  நம்பிக்கை கூட்டணி,  தேசிய முன்னணி  இடையேயான ஒத்துழைப்பு தொடர்ந்து வலுப்படுத்தப்படுகிறது.

இரு கூட்டணிகளுக்கும் இடையிலான தேர்தல் இயந்திரங்களின் ஒருங்கிணைப்பு மூலம் ஒத்துழைப்பு வெளிப்படுகிறது.

தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சருமான டத்தோஸ்ரீ ரமணன் இவ்வாறு கூறினார்.

இந்த ஒத்துழைப்பு சபாவின் அரசியல் களத்தில், குறிப்பாக  மோயோக்கில் ஒரு புதிய தொடக்கத்தைக் குறிக்கிறது.

அம்னோ, மசீச, மஇகா, ஜிபிஆர்எஸ் உட்பட 1,000 க்கும் மேற்பட்ட தேசிய முன்னணி பெனாம்பாங் தேர்தல் கேந்திரங்கள் முழு உற்சாகத்துடனும் அர்ப்பணிப்புடனும் ஒன்றிணைந்ததைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

இது நாம் ஒன்றாகவும் ஒற்றுமையாகவும் இருக்கிறோம் என்பதை காட்டுகிறது.

ஒன்றாக, வேட்பாளர் ரெமிஸ்டா ஜிம்மி டெய்லருடன் மோயோக் அதிக நம்பிக்கையுடனும் மகிமையுடனும் முன்னேறுவதை உறுதிசெய்ய இந்த சிறந்த முயற்சியை வெற்றிகரமாக்குவோம் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset