செய்திகள் மலேசியா
சிலாங்கூரில் போலிசாருடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஆடவர் உயிரிழந்தார்: டத்தோ குமார்
கோலாலம்பூர்:
சிலாங்கூரில் போலிசாருடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஆடவர் ஒருவர் உயிரிழந்தார்.
புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ எம். குமார் இதனை கூறினார்.
சிலாங்கூர் ஜாலான் பந்திங்-டெங்கில், மைல் 8 இல் சாலையோரத்தில் நேற்று இரவு துப்பாக்கி சூட்டு சம்பவம் நடந்தது.
இந்த சம்பவத்தில் போலிசாருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஒருவர் இறந்தார்.
புக்கிட் அமான் ஜேஎஸ்ஜே தீவிர குற்றப் பிரிவின் அதிகாரிகள், உறுப்பினர்கள் குழு இரவு 8.10 மணியளவில் பந்திங், டெங்கில், சிப்பாங் ஆகிய இடங்களில் கொள்ளை குற்றங்களைக் கண்டறிந்து தடுக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.
சந்தேகத்திற்கிடமான நிலையில் ஒரு நபர் ஓட்டிச் சென்ற பெரோடுவா மைவி காரை அந்தக் குழு கண்டது.
சம்பந்தப்பட்ட காரை நிறுத்த குழு முயன்றபோது, சந்தேக நபர் திடீரென காருக்குள் இருந்து போலிஸ் அதிகாரிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
பாதுகாப்பு அச்சுறுத்தல் இருந்ததால் போலிசார் குழு திருப்பிச் சுட்டது.
சந்தேக நபர் இறந்துவிட்டதாக மருத்துவக் குழு உறுதிப்படுத்தியது.
முதற்கட்ட விசாரணையில் சந்தேக நபர் உள்ளூர் ஆடவர் என்று சந்தேகிக்கப்பட்டது.
ஆனால் எந்த அடையாளமும் கிடைக்கவில்லை என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 3, 2026, 11:34 pm
கோலாலம்பூர்-ஜெட்டா, மதீனா இருவழி விமான சேவைகள் தற்காலிகமாகத் தொடங்கப்படுகிறது: மலேசிய ஏர்லைன்ஸ்
March 3, 2026, 10:36 pm
இணைய மோசடிகள் குறித்த கல்விக்கு முன்னுரிமை அளிக்க பிரதமர் வலியுறுத்தல்
March 3, 2026, 10:33 pm
லஞ்ச வழக்கில் போலிஸ் போக்குவரத்து அதிகாரி கைது
March 3, 2026, 10:18 pm
மலேசியா குடும்பக் கட்சிக்கும் எனது கொள்கைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை: இஸ்மாயில் சப்ரி
March 3, 2026, 10:17 pm
சவூதி அரேபியாவில் சிக்கித் தவிக்கும் 1,600 மலேசிய உம்ரா யாத்ரீகர்கள்
March 3, 2026, 8:24 pm
தவறு என்றால் தவறு தான்; மத உணர்வுகளில் விளையாட வேண்டாம்: டத்தோ சிவக்குமார்
March 3, 2026, 8:23 pm
