செய்திகள் மலேசியா
வெள்ளம் சூழும் அபாயகரமான பகுதிகளில் வசிப்பவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்: பிரதமர் அன்வார்
கோலாலம்பூர்:
வெள்ளத்தால் சூழப்படும் அபாயகரமான பகுதிகளில் வசிப்பவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை நினைவூட்டினார்.
ஆப்பிரிக்கக் கண்டத்தில் மூன்று நாடுகள் சுற்றுப்பயணமாக பிரதமர் தற்போது கென்யாவில் உள்ளார்.
இந்நிலையில் ஏழு மாநிலங்களைப் பாதித்து, தற்போது 15,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள வெள்ள நிலைமை மோசமடைந்து வருவது குறித்து கவலை தெரிவித்தார்.
ஆபத்தில் உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் விழிப்புடன் இருக்கவும், அதிகாரிகளின் அறிவுறுத்தல்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும்.
குறிப்பாக உடனடியாக வெளியேறும்படி கேட்கப்படும்போது, குடும்பப் பாதுகாப்பை முன்னுரிமையாகக் கருதவும் பிரதமர் நினைவூட்டினார்.
மேலும் நட்மா தொடர்புடைய அனைத்து நிறுவன சொத்துக்களுடன் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முழுமையாகத் திரட்டப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உடனடி உதவி சென்றடைவதை நிவாரணக்குழு உறுதி செய்கிறது என்று பிரதமர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 25, 2025, 8:18 am
2021 முதல் 5,293 ஆசிரியர்கள் முன்கூட்டியே ஓய்வு பெற்றுள்ளனர்: ஃபட்லினா
November 24, 2025, 9:28 pm
ஜாலான் கிள்ளான் லாமாவில் 10 மீட்டர் அளவுக்கு நிலச்சரிவு
November 24, 2025, 9:26 pm
முழு முயற்சியுடன் எஸ்பிஎம் தேர்வை எழுதுங்கள்: மாணவர்களுக்கு டத்தோ லோகா பாலமோகன் வலியுறுத்து
November 24, 2025, 9:25 pm
வீட்டுக் காவல் மனுவின் நிலை என்ன என்பதை அறிய நஜிப் ஜனவரி 5 வரை காத்திருக்க வேண்டும்
November 24, 2025, 9:24 pm
பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டை முன்னாள் தேசிய வூஷு பயிற்சியாளர் மறுத்தார்
November 24, 2025, 7:37 pm
இந்திரா காந்தி வழக்கை உடனடியாக தீர்க்க அதிகாரத்தை முறையாகப் பயன்படுத்துங்கள்: டத்தோ சிவக்குமார்
November 24, 2025, 5:36 pm
