செய்திகள் மலேசியா
வெள்ளம் மோசமடைந்து வருகிறது: 10 மாநிலங்களில் 19,000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு
கோலாலம்பூர்:
நாட்டில் வெள்ளம் மோசமடைந்து வருவதால் 10 மாநிலங்களில் கிட்டத்தட்ட 19,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை 9 மணி நிலவரப்படி 121 தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் மொத்தம் 19,422 வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கியுள்ளனர்.
தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (நட்மா) படி, நிவாரண மையங்களில் தங்கியிருக்கும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று பதிவு செய்யப்பட்ட 16,201 பேருடன் ஒப்பிடும்போது அதிகரித்துள்ளது.
கிளந்தானில் அதிகபட்சமாக 9,981 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதைத் தொடர்ந்து பெர்லிஸ் (2,644), பேராக் (2,604), சிலாங்கூர் (2,119) ஆகியவை உள்ளன.
இதில் கெடா, பினாங்கு (377), திரெங்கானு (98), சரவா (32), பகாங் (23), கோலாலம்பூர் (இரண்டு) ஆகிய இடங்களில் 1,576 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளம் காரணமாக உயிரிழப்புகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்றும் நட்மா உறுதிப்படுத்தியுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 3, 2026, 11:34 pm
கோலாலம்பூர்-ஜெட்டா, மதீனா இருவழி விமான சேவைகள் தற்காலிகமாகத் தொடங்கப்படுகிறது: மலேசிய ஏர்லைன்ஸ்
March 3, 2026, 10:36 pm
இணைய மோசடிகள் குறித்த கல்விக்கு முன்னுரிமை அளிக்க பிரதமர் வலியுறுத்தல்
March 3, 2026, 10:33 pm
லஞ்ச வழக்கில் போலிஸ் போக்குவரத்து அதிகாரி கைது
March 3, 2026, 10:18 pm
மலேசியா குடும்பக் கட்சிக்கும் எனது கொள்கைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை: இஸ்மாயில் சப்ரி
March 3, 2026, 10:17 pm
சவூதி அரேபியாவில் சிக்கித் தவிக்கும் 1,600 மலேசிய உம்ரா யாத்ரீகர்கள்
March 3, 2026, 8:24 pm
தவறு என்றால் தவறு தான்; மத உணர்வுகளில் விளையாட வேண்டாம்: டத்தோ சிவக்குமார்
March 3, 2026, 8:23 pm
