செய்திகள் மலேசியா
2021 முதல் 5,293 ஆசிரியர்கள் முன்கூட்டியே ஓய்வு பெற்றுள்ளனர்: ஃபட்லினா
கோலாலம்பூர்:
கடந்த 2021 முதல் கிட்டத்தட்ட 5,293 ஆசிரியர்கள் முன்கூட்டியே ஓய்வு பெற்றுள்ளனர்.
கல்வியமைச்சர் ஃபட்லினா சிடேக் இதனை கூறினார்.
2021 முதல் 2024 வரை மொத்தம் 5,293 ஆசிரியர்கள் பொது சேவைத் துறையில் இருந்து விருப்பத்தின் மூலம் முன்கூட்டியே ஓய்வு பெறத் தேர்வு செய்தனர்.
கல்வி அமைச்சில் உள்ள மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கையில் இந்த எண்ணிக்கை 1.24 சதவீதம் ஆகும்.
கல்விமைச்சின் தரவுகளின் அடிப்படையில், முன்கூட்டியே ஓய்வு பெற விண்ணப்பித்த ஆசிரியர்களில் 67.44 சதவீதம் பேர், தங்கள் பணியைத் தொடர இனி ஆர்வம் காட்டவில்லை என்று முக்கியக் காரணமாகக் கூறினர்.
குடும்பப் பிரச்சினைகள் 17.43 சதவீதமாகவும், அதைத் தொடர்ந்து உடல்நலப் பிரச்சினைகள் 7.69 சதவீதமாகவும், பணிச்சுமை 5.37 சதவீதமாகவும், தனிப்பட்ட பிரச்சினைகள் 2.07 சதவீதமாகவும் உள்ளன.
நேற்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 25, 2025, 8:46 am
வெள்ளம் சூழும் அபாயகரமான பகுதிகளில் வசிப்பவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்: பிரதமர் அன்வார்
November 24, 2025, 9:28 pm
ஜாலான் கிள்ளான் லாமாவில் 10 மீட்டர் அளவுக்கு நிலச்சரிவு
November 24, 2025, 9:26 pm
முழு முயற்சியுடன் எஸ்பிஎம் தேர்வை எழுதுங்கள்: மாணவர்களுக்கு டத்தோ லோகா பாலமோகன் வலியுறுத்து
November 24, 2025, 9:25 pm
வீட்டுக் காவல் மனுவின் நிலை என்ன என்பதை அறிய நஜிப் ஜனவரி 5 வரை காத்திருக்க வேண்டும்
November 24, 2025, 9:24 pm
பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டை முன்னாள் தேசிய வூஷு பயிற்சியாளர் மறுத்தார்
November 24, 2025, 7:37 pm
இந்திரா காந்தி வழக்கை உடனடியாக தீர்க்க அதிகாரத்தை முறையாகப் பயன்படுத்துங்கள்: டத்தோ சிவக்குமார்
November 24, 2025, 5:36 pm
