நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

செண்டாயானில் வெட்டி, சுட்டுக் கொல்லப்பட்ட நபர் மீது 42 குற்றப் பதிவுகள் உள்ளன: போலிஸ்

சிரம்பான்:

சிரம்பான் செண்டாயானில் வெட்டி, சுட்டுக் கொல்லப்பட்ட நபர் மீது 42 குற்றப் பதிவுகள் உள்ளன.

நெகிரி செம்பிலான் மாநில போலிஸ் டத்தோ அல்சாப்னி அகமது இதனை கூறினார்.

கடந்த புதன்கிழமை இரவு இங்குள்ள நுசாரி பிஸ் செண்டாயனில் நடந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஆடவர் ஒருவர் கொல்லப்பட்டார்.

கொல்லப்பட்ட ஆடவர் மீது 42 குற்றப் பதிவுகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொள்ளை, காயம் ஏற்படுத்துதல், வீடு புகுந்து கொள்ளையடித்தல் உள்ளிட்ட குற்றங்களில் அவர் தொடர்புடையவராக உள்ளார்.

33 வயதுடைய அந்நபர் தனது குடும்பத்தினருடன் அந்த இடத்திற்கு அருகிலுள்ள ஒரு உணவகத்திற்கு இரவு உணவிற்கு வந்திருப்பது ஆரம்ப விசாரணையில் கண்டறியப்பட்டது.

பாதிக்கப்பட்டவர் தனது வாகனத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, ​​முகத்தை மூடிய ஆறு சந்தேக நபர்களை ஏற்றிச் சென்ற கார்கள் பாதிக்கப்பட்டவரின் காரை வழிமறித்தன.

துப்பாக்கி, பாராங்கத்தியை ஏந்தியதாக சந்தேகிக்கப்படும் சந்தேக நபர் வெளியே வந்து பாதிக்கப்பட்டவரைத் தாக்கியுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர் சாலையை கடந்து தப்பிச் செல்ல முயன்றார்.

ஆனால் சந்தேக நபர் அவரைத் துரத்திச் சென்று துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

அதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவருக்கு பலத்த காயம் ஏற்படும் வரை கத்தியால் தாக்குதல் நடத்தப்பட்டது.

துவாங்கு ஜாஃபர் மருத்துவமனையின் உதவி மருத்துவ அதிகாரியால் பாதிக்கப்பட்டவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அவர் மேலும் கூறினார்.

பாதிக்கப்பட்டவரின் உடலில் வெட்டுக்கள், துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஆடவர்களை போலிசார் தேடி வருகின்றனர் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset