நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்தியர்களின் ஆதரவு இழந்ததற்கு அம்னோதான் காரணம்; மஇகா அல்ல: சிவராஜ்

கோலாலம்பூர்:

இந்தியர்களின் ஆதரவு இழந்ததற்கு அம்னோ தான் முக்கிய காரணமாகும்.

மஇகா அல்ல என்று அதன் வியூக இயக்குநர் டத்தோ சிவராஜ் இதனை கூறினார்.

தேசிய முன்னணிக்கான இந்திய ஆதரவு சரிவுக்கு அம்னோவை தான் நாங்கள் குற்றம் சாட்டுவோம்.

கூட்டணித் தலைவர் அம்னோ அரசாங்கத்தை வழிநடத்தியபோது எடுத்த முடிவுகள்தான் இதற்கு உண்மையான காரணம்.

மஇகாவுக்கான இந்திய ஆதரவு சரிந்தது உள் தோல்வியால் அல்ல.

மாறாக அரசாங்கத்தையும் அனைத்து முக்கிய நிறுவனங்களையும் கட்டுப்படுத்திய அம்னோவின் முடிவுகள், கொள்கைகள், தவறான நடவடிக்கைகளின் நேரடி விளைவுதான் காரணம்.

முன்னதாக முன்னாள் மீடியா பிரைமா செய்தித் தலைவர் அஷ்ரப் அப்துல்லாஹ், மஇகா இனி இந்திய ஆதரவைப் பெறாததால் ஒரு முக்கிய காரணமாக மாறிவிட்டது.

இதனால் கடந்த தேர்தலில் ஒரே ஒரு இடத்தை  மட்டுமே அது வென்றது.

அதிக எண்ணிக்கையிலான இந்திய வாக்காளர்களைக் கொண்ட பகுதிகளில் வெற்றி பெற முடியாததால், கட்சி இப்போது மலாய்க்காரர்கள் பெரும்பான்மையாக இருக்கும் இடங்களைச் சார்ந்துள்ளது என்று அவர் கூறினார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் இந்தியர்களின் ஆதரவு வீழ்ச்சி 2001 கம்போங் மேடன் மோதல்களில் தொடங்கியது.

அப்போது பல இந்தியர்கள் கூட்டரசு கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மாநில நிறுவனங்களால் கைவிடப்பட்டு நியாயமற்ற முறையில் குறிவைக்கப்பட்டதாக உணர்ந்தனர்.

2007ஆம் ஆண்டுக்குப் பிறகு, அம்னோவால் ஆதிக்கம் செலுத்தப்படும் கூட்டரசு, மத அமைப்புகளால் கையாளப்பட்ட ஆலய இடிப்புகள், ஒருதலைப்பட்ச மதமாற்றங்கள் குறித்து இந்தியர்கள் கோபமடைந்ததனர்.

2007 ஆம் ஆண்டு நடந்த மிகப்பெரிய ஹிண்ட்ராப் பேரணி மஇகாவை மட்டும் இலக்காகக் கொண்டிருக்கவில்லை.

நியாயமான இந்தியர்களின் கவலைகளைப் பொருட்படுத்தாமல் தோன்றிய அம்னோ தலைமையிலான அரசாங்கத்திற்கு இது நேரடி எதிர்வினையாகும்.

ஆக தேசிய முன்னணியிம் தோல்விக்கு மஇகா காரணமல்ல. 

மற்றவர்களால் பொறுப்பற்ற முறையில் வாகனத்தை ஓட்டியது தான் காரணம்.

மஇகாவான  நாங்கள் வெறும் பயணிகள் தான் என்று சிவராஜ் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset