செய்திகள் மலேசியா
சிங்கப்பூரில் மலேசியரான சாமிநாதனுக்கு எதிரான தூக்குத் தண்டனை நவம்பர் 27இல் நிறைவேற்றப்படும்
கோலாலம்பூர்:
அடுத்த வாரம் மற்றொரு மலேசியர் தூக்கிலிடப்பட உள்ளார் என்று சிங்கப்பூர் அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.
போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட மற்றொரு மலேசியரான சாமிநாதன் செல்வராஜு நவம்பர் 27 அன்று தூக்கிலிடப்படுவார்.
தட்சிணாமூர்த்தி, பன்னீர் செல்வம் ஆகிய இரண்டு மலேசியர்கள் சமீபத்திய மாதங்களில் சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்டுள்ளனர்.
சிங்கப்பூர் சிறைச்சாலையின் மூத்த உதவி இயக்குநர் லிம் லே கிம் அனுப்பிய கடிதத்தில்,
வரும் நவம்பர் 26 வரை காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் சாமிநாதனின் குடும்பத்தினரை நீட்டிக்கப்பட்ட வருகைகளுக்கு அதிகாரிகள் அனுமதிப்பதாகக் கூறினார்.
முன்னதாக கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி சிங்கப்பூர் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட குழு, குடியரசின் போதைப்பொருள் துஷ்பிரயோகச் சட்டத்தின் ஒரு விதிக்கு எதிரான அரசியலமைப்பு ரீதியான சவாலை நிராகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 21, 2025, 12:23 pm
செண்டாயானில் வெட்டி, சுட்டுக் கொல்லப்பட்ட நபர் மீது 42 குற்றப் பதிவுகள் உள்ளன: போலிஸ்
November 21, 2025, 12:22 pm
கேமரன்மலைகளில் குடிநுழைவு அதிகாரிகள் அதிரடி சோதனை: 400க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் கைது
November 21, 2025, 11:59 am
உள்ளூர் வேட்பாளர் ரெமிஸ்டா ஜிம்மி டெய்லரை மோயோக் வாக்காளர்கள் ஆதரிக்க வேண்டும்: டத்தோஸ்ரீ ரமணன்
November 21, 2025, 10:46 am
மஇகாவும் தேசிய முன்னணியும் எதிரிகள் அல்ல; சந்திக்கத் தயார்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
November 21, 2025, 10:05 am
இந்தியர்களின் ஆதரவு இழந்ததற்கு அம்னோதான் காரணம்; மஇகா அல்ல: சிவராஜ்
November 20, 2025, 2:58 pm
சமூக வலையமைப்புகளின் கூட்டமைப்பு (PGRM) தகுதியானவர்களுக்கு விருது வழங்கி வரலாறு படைத்தது
November 20, 2025, 1:48 pm
நீதிமன்றம் 4.1 மில்லியன் ரிங்கிட் அபராதம் விதித்த பிறகு அடாம் ரட்லான் காணாமல் போனார்: அசாம் பாக்கி
November 20, 2025, 1:47 pm
