நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சரஸ்வதியை கொலை செய்ததாக இருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது

பெட்டாலிங்ஜெயா:

இளம் இந்திய பெண் சரஸ்வதி கொலை செய்ததாக இருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபரில் சிலாங்கூரில் உள்ள ஸ்ரீ கெம்பங்கானில் உள்ள புளூ வாட்டர் தோட்டத்தில் ஓர் இளம் பெண் கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக நம்பப்படும் இரண்டு ஆண்கள் மீது இன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

தகவல் தொழில்நுட்ப ஊழியராக பணி புரியும் 26 வயதான கே. கார்த்திக், லோரி ஓட்டுநராக பணிபுரியும் 23 வயதான ஏ. ஹரிபிரசாந்த் ஆகியோர் சரஸ்வதி சான் சீ கியோங் (24) என்பவரின் மரணத்திற்குக் காரணமானதாகக் குற்றம் சாட்டப்பட்டனர்.

குற்றம் சாட்டப்பட்ட இருவரும் காலை 9 மணிக்கு வெள்ளைச் சட்டை அணிந்து நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.

அவர்களுடன் செர்டாங் மாவட்ட போலிஸ் தலைமையகத்தின் போலிசாரும் உடன் வந்தனர்.

விசாரணையின் போது ஜனவரி 16 அன்று வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்ட நீதிபதி ஷாரில் அனுவார் அகமது முஸ்தபா முன் வாசிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளைப் புரிந்துகொண்டு இருவரும் தலையசைத்தனர்.

இருப்பினும், கொலைக் குற்றச்சாட்டைத் தொடர்ந்து இரு குற்றவாளிகளிடமிருந்தும் எந்த வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.

அவர்கள் மீதான குற்றச்சாட்டு குற்றவியல் சட்டத்தின் பிரிவு 302 இன் கீழ் உள்ளது.

இது குறைந்தபட்சம் 30 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 40 ஆண்டுகள் வரை மரண தண்டனை அல்லது சிறைத்தண்டனையை வழங்குகிறது.

மேலும் தூக்கிலிடப்படாவிட்டால் 12 பிரம்படிகளுக்கு மிகாமல் சவுக்கடி தண்டனைக்கு உட்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset