செய்திகள் மலேசியா
மித்ராவை மட்டும் நம்பியிருக்க முடியாது; அரசாங்கத்தில் உள்ள இதர வாய்ப்புகளை ஆராய வேண்டும்: செல்வன் நாகப்பன்
கோலாலம்பூர்:
மித்ராவை மட்டும் நம்பியிருக்காமல் அரசாங்கத்தில் உள்ள இதர வாய்ப்புகளை ஆராய்ந்து பயனடைய வேண்டும்.
கோலாலம்பூர், புத்ராஜெயா இந்திய வர்த்தக தொழிலியல் சபையின் முதன்மை இலக்கு இதுவாகும் என்று அதன் செயலாளர் செல்வன் நாகப்பன் கூறினார்.
கோலாலம்பூர், புத்ராஜெயா இந்திய வர்த்தக தொழிலியல் சபையின் ஆண்டுக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இக் கூட்டத்துடன் இணைந்து தீபாவளி விருந்துபசரிப்பு நிகழ்வும் நடைபெற்றது.
ஆண்டுக் கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
குறிப்பாக உறுப்பினர்கள் பயனடையும் திட்டங்கள், உறுப்பினர்களிடையே நட்புறவு, வர்த்தக உறவை ஏற்படுத்துவதற்கான தொடர் நடவடிக்கைகள் போன்றவை குறித்து விரிவாக பேசப்பட்டது.
குறிப்பாக அரசாங்கத்தில் உள்ள வாய்ப்புகள் (மித்ரா தவிர) இதரவற்றை ஆரய்ந்து அதை உறுப்பினர்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும்.
காரணம் மித்ராவில் 100 மில்லியன் ரிங்கிட் மட்டுமே ஒதுக்கப்படுகிறது.
இந்நிதியை மட்டும் நம்பியிருக்காமல் அரசாங்கத்தில் உள்ள இதர வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்
இந்த வாய்ப்புகளை ஆராய்ந்து அதை உறுப்பினர்களுக்கு கொண்டு சேர்க்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
அதே வேளையில் வெளிநாடுகளில் உள்ள வர்த்தக வாய்ப்புகளும் உறுப்பினர்களுக்கு கொண்டு சேர்க்கப்படும்.
2026ஆம் ஆண்டில் இதை இலக்காக கொண்டே கோலாலம்பூர், புத்ராஜெயா இந்திய வர்த்தக தொழிலியல் சபை செயல்படும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 12, 2025, 9:42 pm
ஆமாவா... உங்களுக்கு யார் சொன்னது?: பிரதமர்
November 12, 2025, 9:39 pm
இந்த ஆண்டு 55 மலேசியர்கள் போதைப்பொருள் கழுதைகள் என வெளிநாடுகளில் கைது செய்யப்பட்டனர்: ஹுசைன் ஒமார் கான்
November 12, 2025, 9:38 pm
வளர்ச்சி துரோகமாக மாறும்போது சிலாங்கூர் அரசின் வாக்குறுதிகள் நிறைவேறாமல் போகிறது: சார்லஸ் சந்தியாகோ
November 12, 2025, 9:36 pm
கம்போங் ஜாலான் பாப்பான் வீடுகள் உடைப்பு: பிஎஸ்எம் அருட்செல்வம் உட்பட 3 பேர் கைது
November 12, 2025, 9:35 pm
சபா தேர்தல்: தேமு வேட்பாளராக அறிவிக்கப்பட்ட 3 நாட்களுக்குள் ரஹ்மான் டஹ்லான் விலகல்
November 12, 2025, 9:34 pm
போலிஸ் அதிகாரிகளின் பணிக்கு இடையூறு விளைவித்ததாக இன்ஸ்பெக்டர் ஷீலா மீது மீண்டும் வழக்குப் பதிவு
November 12, 2025, 9:33 pm
சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் செயல்கள் குறித்து ரக்கான் வலைத்தளத்தில் புகாரளிக்கலாம்: சரஸ்வதி
November 12, 2025, 9:32 pm
இணைய பாதுகாப்பு பயிற்சி திட்டத்தில் பங்கேற்க 30 இந்திய இளைஞர்களுக்கு வாய்ப்பு
November 12, 2025, 1:33 pm
பூமிபுத்ரா பழ ஊறுகாய் உற்பத்தியாளர்களை அரசாங்கம் கைவிடாது: டத்தோஸ்ரீ ரமணன்
November 12, 2025, 1:08 pm
