செய்திகள் மலேசியா
சிறையில் மரணமடைந்த திருநாவுக்கரசுக்கு நீதி கிடைக்க வேண்டும்: புக்கிட் அமானில் குடும்பத்தினர் மகஜர்
கோலாலம்பூர்:
சிறையில் மரணமடைந்த திருநாவுக்கரசுக்கு நீதி கிடைக்க வேண்டும் என அவரின் குடும்பத்தினர் சார்பில் புக்கிட் அமானில் மகஜர் வழங்கப்பட்டது.
நம்பிக்கை இயக்கத்தின் தலைவர் டத்தோ டாக்டர் கலைவாணர் இதனை கூறினார்.
கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி திருநாவுக்கரசு கோல லங்காட் மாவட்ட தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டார்.
செப்டம்பர் 14ஆம் தேதி அவர் பந்திங் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார்.
மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சைகள் வழங்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
செப்டம்பர் 17ஆம் தேதி சிப்பாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
பின் அவர் சுங்கைப்பூலோ சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டார்.
இந்நிலையில் திருநாவுக்கரசு செப்டம்பர் 18ஆம் தேதி சிறைச்சாலையில் மரணமடைந்தார்.
இதனைத் தொடர்ந்து அவரின் உடல் சவப் பரிசோதனைக்காக சுங்கைபூலோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
சவப்பரிசோதனைக்கு பின் அவரின் உடலில் காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
அதே வேளையில் அவர் கோல லங்காட் போலிஸ் தலைமையகத்தின் தடுப்பு காவலில் இருந்த போது தாக்கப்பட்டிருக்கலாம் என அவரின் குடும்பத்தார் சந்தேகிக்கின்றனர்.
அதன் அடிப்படையில்தான் அவரின் குடும்பத்தார் சார்பில் புக்கிட் அமானில் இன்று மகஜர் வழங்கப்பட்டது.
திருநாவுக்கரசு மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும்.
தேசிய போலிஸ்படைத் தலைவரும் உள்துறை அமைச்சரும் தலையிட வேண்டும்.
மேலும் இவ்விவகாரம் தொடர்பில் சுஹாகாமிடமும் மகஜர் வழங்கப்படும் என்று டத்தோ டாக்டர் கலைவாணர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 20, 2026, 8:36 pm
நஜிப் உட்பட ஒவ்வொரு கைதிக்கும் மேல்முறையீடு செய்ய உரிமை உண்டு: பிரதமர்
September 20, 2026, 8:35 pm
நஜிப்பின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதால், 50 மில்லியன் ரிங்கிட் அபராதத்தை செலுத்துவது கடினம்: ஷாபி
September 20, 2026, 8:34 pm
அமைச்சர் பதவியிலிருந்து விலகல்: ஷாங்காயில் இருந்து திரும்பிய பிறகு அந்தோனி லோக்கை பிரதமர் சந்திக்கிறார்
September 20, 2026, 8:33 pm
ஆசிய விளையாட்டுப் போட்டி: மலேசியாவின் பதக்கக் கணக்கை தேவேந்திரன் தொடங்கினார்
September 20, 2026, 8:32 pm
பொதுத் தேர்தலில் தேசிய முன்னணியின் வெற்றிக்கு இளைஞர்களின் பங்களிப்பு அவசியம்: டத்தோஸ்ரீ சாரணி
September 20, 2026, 1:22 pm
அம்னோவை எதிர்கொள்ள கூட்டணி அமைப்பதற்காக பெர்சத்து கட்சியை மற்ற கட்சிகள் உளவு பார்க்கின்றன: அஸ்மின்
September 20, 2026, 1:22 pm
