செய்திகள் மலேசியா
சிறையில் இருந்து வெளியாகி 2 மாதங்களே ஆன நிலையில் கூசாய் மீண்டும் கைது
சுங்கைப் பட்டாணி:
சிறையில் இருந்து வெளியாகி 2 மாதங்களே ஆன நிலையில் கூசாய் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
கோலா மூடா மாவட்ட போலிஸ் தலைவர் ஹன்யான் ரம்லான் இதனை தெரிவித்தார்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு குற்றச் செயலுக்காக சிறையில் இருந்து கூசாய் எனும் ஆடவர் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் மாவட்டத்தில் உள்ள ஒரு தொலைத்தொடர்பு நிறுவனத்திற்குச் சொந்தமான வாகனம், கேபிளைத் திருடிய வழக்கில் ஈடுபட்ட பின்னர் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
21 வயதான உள்ளூர் ஆடவரான சந்தேக நபரிடம் 10 முந்தைய பதிவுகள் உள்ளன.
அவற்றில் ஐந்து போதைப்பொருள் தொடர்பானதும், ஐந்து இதர குற்றப் பதிவுகள் உள்ளன.
கூசாய் என்று அழைக்கப்படும் சந்தேக நபர், கடந்த மாதம் முதல் கோலா மூடா மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள், உறுப்பினர்களால் ஓப் லெஜாங்கில் மூன்று தனித்தனி சோதனைகளில் 21 முதல் 25 வயதுக்குட்பட்ட அவரது மூன்று நண்பர்களுடன் கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர் சம்பந்தப்பட்ட ஒரு தொலைத்தொடர்பு நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் என்று நம்பப்படுகிறது.
இது குற்றச் செயலைச் செய்ய அவருக்கு தைரியத்தை அளித்தது என்று விசாரணையில் கண்டறியப்பட்டது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 9, 2025, 4:23 pm
மடானி அரசாங்கத்தின் கீழ் ஒரு தமிழ்ப்பள்ளியும் மூடப்படாது: ஃபட்லினா சிடேக் உறுதி
December 9, 2025, 11:15 am
மஸ்ஜித் இந்தியா கோலாலம்பூர், SIMS KL , MMYC இணைந்து காசாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிதி ஒப்படைப்பு
December 9, 2025, 10:47 am
போலிஸ் காவலில் இறந்தவரின் குடும்பத்திற்கு 1.1 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு
December 8, 2025, 8:02 pm
பேராக்கில் நடந்த பயிற்சி விமான விபத்தில் 2 பேர் காயம்
December 8, 2025, 7:59 pm
